ஒதுக்கிய பரத்.. துணிந்து நடித்த தனுஷ்.. பற்றிக்கொண்ட ஸ்ரேயா - தனுஷ் கெமிஸ்ட்ரி.. 100 நாட்கள் ஓடிய திருவிளையாடல் ஆரம்பம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஒதுக்கிய பரத்.. துணிந்து நடித்த தனுஷ்.. பற்றிக்கொண்ட ஸ்ரேயா - தனுஷ் கெமிஸ்ட்ரி.. 100 நாட்கள் ஓடிய திருவிளையாடல் ஆரம்பம்

ஒதுக்கிய பரத்.. துணிந்து நடித்த தனுஷ்.. பற்றிக்கொண்ட ஸ்ரேயா - தனுஷ் கெமிஸ்ட்ரி.. 100 நாட்கள் ஓடிய திருவிளையாடல் ஆரம்பம்

Marimuthu M HT Tamil Published Dec 15, 2024 03:48 PM IST
Marimuthu M HT Tamil
Published Dec 15, 2024 03:48 PM IST

ஒதுக்கிய பரத்.. துணிந்து நடித்த தனுஷ்.. பற்றிக்கொண்ட ஸ்ரேயா - தனுஷ் கெமிஸ்ட்ரி.. 100 நாட்கள் ஓடிய திருவிளையாடல் ஆரம்பம்.. இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவுசெய்த திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படம் பற்றிப்பார்ப்போம்.

ஒதுக்கிய பரத்.. துணிந்து நடித்த தனுஷ்.. பற்றிக்கொண்ட ஸ்ரேயா - தனுஷ் கெமிஸ்ட்ரி.. 100 நாட்கள் ஓடிய திருவிளையாடல் ஆரம்பம்
ஒதுக்கிய பரத்.. துணிந்து நடித்த தனுஷ்.. பற்றிக்கொண்ட ஸ்ரேயா - தனுஷ் கெமிஸ்ட்ரி.. 100 நாட்கள் ஓடிய திருவிளையாடல் ஆரம்பம்

இப்படத்திற்கு முதலில் திருவிளையாடல் என்று சிவாஜி கணேசன் நடித்த பழைய படத்தின் பெயர் தான் வைத்தனர். இதனை அறிந்த நடிகர் திலகம் சிவாஜி கணேனின் ரசிகர்கள், புதிய படத்திற்கும் இதே பெயர் வைத்தால், சிவாஜி கணேசன் படத்திற்கும் புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுவிடும் எனக்கருதி, படத்தின் பெயரை மாற்றக்கோரி தயாரிப்பாளர் விமலா கீதாவிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று இப்படம் திருவிளையாடல் ஆரம்பம் எனப்பெயர் வைக்கப்பட்டது.

திருவிளையாடல் ஆரம்படம் படத்தின் கதைக்கரு என்ன?:

இப்படத்தில் திருக்குமரன்(தனுஷ்) எதையும் மிக ஜாலியாக எடுத்துக்கொள்ளும் லைட் ஹார்ட் இளைஞர். தனது நண்பர்களான டைகர் குமார்(கருணாஸ்), சுகுமார் மற்றும் ஏனையோருடன் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பணக்காரப் பெண்ணான பிரியாவை(ஸ்ரேயா) கோயிலில் பார்த்ததும் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் எனும் மொமண்டில் காதல் செய்கிறான். அதற்காக அவரது வீட்டு வாசலில் சென்று, சிசிடிவி முன்பு வித்தியாசமாகப் பேசி, இம்ப்ரெஸ் செய்கிறான். எப்படியோ, அவளை தன்வசம் கொண்டு வருகிறான்.

இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர். இதைத்தொடர்ந்து, பிரியாவின் அண்ணன் குரு(பிரகாஷ் ராஜ்), இருவரின் காதலுக்கும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார். அப்போது பல்வேறு சமயோசித நகர்வுகளால், திரு அதில் ஜெயித்து, பிரியாவை மணக்கிறான். அவரைப்போலவே தொழிலிலும் ஜெயிக்கிறான். இதுவே இப்படத்தின் கதை. தவிர, இப்படத்தின் காமெடி கலந்த திரைக்கதைப் பலரின் வெற்றியை உறுதிசெய்தது.

இப்படம் தமிழ் மட்டுமின்றி, 2007ல் தெலுங்கில் டக்கரி எனவும், கன்னடத்தில் தூள் எனவும், 2012ஆம் ஆண்டில் வங்க மொழியிலும், ஒடிய மொழியில் ரங்கீலா டொக்கா எனவும் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

வெற்றிக்கொடி நாட்டிய டி.இமான்:

இப்படத்தின் வெற்றிக்கு டி. இமானின் இசையும் மிக முக்கிய காரணம் எனலாம். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப்பாடல்களும் ஹிட். விழிகளில் விழிகளில் எழுதிவிட்டாள், என்னம்மா கண்ணு(ரீமிக்ஸ்), கண்ணுக்குள் ஏதோ, மதுரை ஜில்லா மச்சான்தாண்டி, தெரியாமா பார்த்துப்புட்டேன் ஆகியப்பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய மைலேஜாக உள்ளன.

திருவிளையாடல் ஆரம்பம் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு:

முதலில் இப்படத்தில் நடிகர் பரத்தை நடிக்க முயற்சிகள் நடந்தன. அவர் வேண்டாமென்று ஒதுக்கிய கதையில் நடிகர் தனுஷ் நடித்தார். 

இப்படமானது தமிழ்நாட்டில் 10 கோடி ரூபாய் வசூலித்தது. இது அந்த தருணத்தில் நடிகர் தனுஷின் உச்சபட்ச வசூல் திரைப்படமாகப் பார்க்கப்பட்டது.

இப்படம் வெளியான பிறகு, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் தனுஷின் நடிப்பையும், உரையாடல் மோதலையும் பலர் பாராட்டினர். இப்படத்தின் இயக்குநர் பூபதி பாண்டியனின் திரைக்கதையும், எளிய வசனங்களும் கூடுதல் பிளஸ் ஆக இருந்தது. இப்படத்தில் முக்கிய நடிகர்கள் தவிர, டைகர் குமாராக நடித்த கருணாஸும் டைடல் பார்க் வேணுகோபலாக வந்த மயில்சாமியையும் இப்போது நினைத்துப் பார்த்தாலும் சிரிப்பு வந்துவிடும்.

இப்படம் வெளியாகி 18 ஆண்டுகளை நிறைவு செய்தாலும் டிவியில் இப்போதுபோட்டாலும் மிக சுவாரஸ்யமாக அனைவரையும் கட்டிப்போட்டு பார்க்க வைத்துவிடும் என்பது நிதசர்ஷன உண்மை.