வெளியே சூப்பர் ஸ்டார் போட்டி: வீட்டில்கூலாக பொங்கல் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்!
Rajinikanth Home Pongal: சிம்பிளாக பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய ரஜினிகாந்த், வெளியில் நடக்கும் எந்த பரபரப்பையும் காதில் போட்டுக்கொண்டதாக தெரியவில்லை. அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டாரோ!
சூப்பர் ஸ்டார் யார் என்கிற போட்டி ஒருபுறம் பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கிறது. விஜய் தான் சூப்பர் ஸ்டார் என ஒரு தரப்பு ஓப்பனாக அறிவித்து, அதற்கான வழிமொழிதலையும் முன்னெடுத்துவிட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
சரத்குமார், சீமான் போன்றோர் அந்த கருத்தில் உறுதியாக இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும் போது, அவர் நடித்துக் கொண்டிருக்கும் போது, எப்படி விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் தரலாம் என, ரஜினி ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் போய்க் கொண்டிருக்க, குடும்பங்கள் வாரிசு, துணிவு என மாறி மாறி தியேட்டர்களில் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட வேறு நடிகர்களின் படங்கள், பொங்கலுக்கு வரவில்லை.
அஜித்தா-விஜய்யா? என்கிற போட்டி போய்கொண்டிருக்கிறது. இதனால் மற்ற நடிகர்கள் கூலாக பொங்கல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் தனது இல்லத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடியிருக்கிறார்.
மகள்கள், மருமகன், பேரன்கள் என அனைவருடனும் புத்தாடை உடுத்தி, பொங்கல் வைத்து, மாடுகளுக்கு படைத்து, பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
இந்த பொங்கல் பண்டிகை தங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும், மறக்க முடியாத பொங்கலாக இருந்ததாக ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நெகிழ்ச்சியோடு இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த போட்டோவில் கணவர் தனுஷ் உடன் அவர் பிரிந்து இருப்பதால், தனது இரு மகன்களுடன் தனது தந்தை ரஜினி மற்றும் தாய் லதா ஆகியோர் காலில் விழுந்து ஆசி வாங்கும் போட்டோவும், வீட்டில் பொங்கல் வைக்கும் போட்டோவும், மாடுகளுக்கு பொங்கல் வழங்கும் போட்டோக்களையும் பகிர்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
சிம்பிளாக பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய ரஜினிகாந்த், வெளியில் நடக்கும் எந்த பரபரப்பையும் காதில் போட்டுக்கொண்டதாக தெரியவில்லை. அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டாரோ!