65 Years of Maragatham: காலத்தால் அழியாத "குங்குமப்பூவே" பாடல் - கொலையாளியை தேடி கண்டறியும் விறுவிறுப்பான த்ரில்லர் கதை
சந்திரபாபு நடனமாடிய காலத்தால் அழியாத "குங்குமப்பூவே" பாடல் இடம்பிடித்த படமாக மரகதம் உள்ளது. கொலையும் கொலையாளியையும் தேடி கண்டறியும் விறுவிறுப்பான த்ரில்லர் கதையாக இந்த படமாக அமைந்திருக்கும்.

பிரபல எழுத்தாளரான டிஎஸ்டி சாமி எழுதிய கருங்குயில் குன்றத்து கொலை என்ற நாவலை அடிப்படையாக கொண்டு சிவாஜி கணேசன் - பத்மினி நடிப்பில் உருவாகிய க்ரைம் த்ரில்லர் படம்தான் மரகதம். எஸ்.எம்.ஸ்ரீராமலு நாயுடு இயக்கிய இந்த படத்தில் டி. எஸ். பாலையா, சந்திரபாபு, வீணை பாலச்சந்தர், ஓஏகே தேவர், சந்தியா, முத்துலட்சுமி, லட்சுமி ராஜம், சரஸ்வதி போன்றோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
படத்துக்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர், திமுக மூத்த தலைவர்களில் ஒருவர் முரசொலி மாறன் வசனம் எழுதியிருப்பார்.
கொலையும் பின்னணியும்
ஜமிந்தார் குடும்பத்தை சேர்ந்த மகாராஜா கொல்லப்படுகிறார். இந்த கொலை பழி மகாராஜாவின் சகோதரர் (வீணை பாலச்சந்தர்) மீது விழுகிறது. சிறைவாசம் அனுபவிக்கும் அவர் ஜெயலில் இருந்து தப்பித்து அவரது மனைவியை (மனைவி) சந்திக்க முயற்சிக்கிறார்.