Singer Suchitra: பாலசந்தர் குறித்து அவதாறு பேச்சு.."முதல்ல குற்றவாளிய தண்டியுங்க, அப்புறமா என்னை கண்டியுங்க"! சுசித்ரா
Singer Suchitra: பாலசந்தர் குறித்து அவதாறு பேச்சு பேசியாத பாடகி சுசித்ராவுக்கு இயக்குநர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. முதல்ல உங்களிடம் புகார் அளித்த நபர் கூறும் குற்றவாளிய தண்டியுங்க, அப்புறமா என்னை கண்டியுங்க என சுசித்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல ஆர்ஜே, பாடகி, நடிகையாக சுசித்ரா, மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர் குறித்து அவதூறு கருத்து பேசியதற்கு தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி தரும் விதமாக பத்மபிரியா என்பவர் அளித்த புகாருக்கு இயக்குநர் சங்கம் குற்றாவாளியை நீதி முன்பு நிறுத்திய பிறகு என்னை கண்டிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
பாடகி சுசித்ராவுக்கு இயக்குநர் சங்கம் கண்டனம்
இதுகுறித்து தமிழ் இயக்குநர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு திரைப்பட உலகில் சமீபத்தில் திரை உலகத்தை சார்ந்தவர்களே திரை உலக கலைஞர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வதும், யூகத்தின் அடிப்படையில் தவறான செய்திகளை பரப்புவதும் வழக்கமாகி உள்ளது.
தமிழ்த்திரை உலகில் என்றும் அழிக்க முடியாத புகழையும், திரை உலகினர் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் அனைவராலும் மதிக்க கூடிய போற்றக்கூடியவராக மிகப்பெரிய சாதனை புரிந்து மறைந்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்.