கண்ணீர் மல்கி நின்ற சமந்தா.. ஆனால் இது சந்தோஷ கண்ணீர் தானாம்.. என்னவாக இருக்கும்?
நடிகை சமந்தா, அல்லு அர்ஜூன் சிறையிலிருந்து வீடு திரும்பியதும் அவரை குடும்பத்தினர் கொண்டாடியதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வந்ததாகக் கூறியுள்ளார்.

திரையரங்கில் ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் ஜாமீன் பெற்று ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார்.
கட்டிப்பிடித்து கலங்கிய குடும்பம்
அப்போது, அவரது சகோதரர் அல்லு சிரிஷ் முதலில் அவரை கட்டிப்பிடிக்க அவரை நோக்கி ஓடி வருகிறார். அதைத் தொடர்ந்து அவரது மகன் அயானும் வந்தார். இதையடுத்து அல்லு அர்ஜூனின் மனைவி சினேகா ரெட்டி அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
வைரலான வீடியோ
இந்த வீடியோ வெளியானதை அடுத்து, அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், இணையம் முழுக்க அல்லு அர்ஜூனின் வீடியோவை வைரலாக்கினர். இதையடுத்து, அல்லு அர்ஜூன் சிறையிலிருந்து வெளிவந்த வீடியோவை சினிமா பிரபலங்கள் சிலரும் பகிர்ந்து தங்களது ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.