தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Antony: 6 மாதமாக சிகிச்சையில் இருந்த விஜய் ஆண்டனி மகள்..வெளியானது பகீர் தகவல்!

Vijay Antony: 6 மாதமாக சிகிச்சையில் இருந்த விஜய் ஆண்டனி மகள்..வெளியானது பகீர் தகவல்!

Karthikeyan S HT Tamil
Sep 19, 2023 11:48 AM IST

தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட விஜய் ஆண்டனியின் மகளுக்கு 6 மாதமாக மன அழுத்தம் இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மீரா (கோப்புபடம்)
மீரா (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

நேற்றிரவு உறங்கச் சென்றவர் இன்று விடியற்காலை 3 மணி அளவில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்த குடும்பத்தினர் அலறி துடித்துள்ளனர். இதையடுத்து உதவியாளருடன் அவரது உடலை கீழே இறக்கி காரில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி மீரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேனாம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர் மன அழுத்ததில் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இதையடுத்து விஜய் ஆண்டனி இல்லத்தில் தேனாம்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீரா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீரா தற்கொலை செய்து கொண்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விஜய் ஆண்டனியின் வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மீராவுக்கு மனஅழுத்தம் இருந்தா என்பது குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தனர். மேலும், மீரா பயன்படுத்தி வந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

இந்த நிலையில், மனஅழுத்தம் காரணமாக கடந்த 6 மாதமாக மீரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இறகு பந்து திறமைசாலியான நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல:

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

IPL_Entry_Point

டாபிக்ஸ்