படம் நல்லா இருந்தால் ஓடும்.. நான் எடுத்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் குப்பை படம்.. தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்
படம் நல்லா இருந்தால் ஓடும்.. நான் எடுத்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் குப்பை படம்.. தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பகீர் பேட்டியளித்துள்ளார்.

இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஒரு கேவலமான குப்பை படம் என்றும்; ஸ்ரேயாவை சரியா பயன்படுத்தவில்லை என்றும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பகீர் பேட்டியளித்துள்ளார்.
மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ’’ கங்குவா படம் பார்த்திட்டு, டைரக்ட் பண்றவன் ஒழுங்காம படத்தை எடுக்காமல், மக்களின் பேச்சுரிமையை நிறுத்த முயற்சிசெய்யக்கூடாது. நீங்கள் ஒழுங்க படம் எடுக்காமல் இரண்டாயிரம் கோடி வசூலிக்கும்ன்னு சொல்லி ஏமாத்தி படத்தை விற்றால், எவ்வளவு நாளைக்கு மக்கள் பார்ப்பாங்க. முதலில் ஏமாற்றுவதை நிறுத்துங்க.அதுதான் அரசியல்வாதி ஏமாத்துறான்ல. சினிமாக்காரன் உண்மையைப் பேசுங்க. படத்தைப் போட்டுப் பார்க்கும்போது, அது ஓடுமா, ஓடாதுன்னு சொல்ற அளவுக்கு சினிமா தயாரிப்பாளருக்கு அறிவே கிடையாது.
பிறகு எதற்கு பேசுறீங்க. ஒழுங்கான படம் எடுத்து ஓடவில்லை என்றால் வருத்தப்படலாம். திருப்பூர் சுப்பிரமணியம் மாதிரியான ஆட்கள் எல்லாம் அடுத்தவர்கள் பற்றி கவலைப்படும் ஆட்கள் கிடையாது. தான் மட்டும் வாழணும். அடுத்தவங்க செத்தால் கவலையில்லைன்னு இருக்கிற மனிதாபிமானமற்ற மக்களாகத்தான் சினிமாவில் இருக்காங்கே.
