பொய் குற்றச்சாட்டு! ஆதாரங்கள் இல்லை..நிவின் பாலி மீதான பாலியல் புகார் வழக்கில் திடீர் திருப்பம் - நடந்தது என்ன?
நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதோடு, எஃப்ஐஆரில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் மீது பெண் பொய் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார் என தெரிகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மலையாளம் திரையுலகை உலுக்கிய சம்பவமாக ஹேமா கமிட்டி அறிக்கை இருந்தது. இதில் மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள், நடிகைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை, துன்புறுத்தல் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்கர் பலர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்கப்பட்டது. ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு வந்த இந்த புகார் அனைத்தும் கவனம் பெற்றன.
பிரேமம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் நிவின் பாலி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பான விசாரணையில் நிவின் பாலிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தாத நிலையில், அவர் மீது போலியானது என தெரியவந்துள்ளது.
நிவின் பாலிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை
நிவின் பாலி மீதான குற்றச்சாட்டுகளை கொத்தமங்கலம் மாவட்ட நீதிமன்றத்தில் எர்ணாக்குளம் டிஒய்எஸ்பி தாக்கல் செய்தார். அதில், புகார்தாரர் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நிவின் பாலி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.