இட்லிக்கடையில் சூடாக இரண்டு டீ.. மீண்டும் தனுஷ் உடன் ஜோடிசேர்ந்த நித்யா மேனன்..தேசிய விருது வாங்கிய கையோடு சூட்டிங்
இட்லிக்கடையில் சூடாக இரண்டு டீ.. மீண்டும் தனுஷ் உடன் ஜோடிசேர்ந்த நித்யா மேனன்..தேசிய விருது வாங்கிய கையோடு சூட்டிங்கில் ஆஜரான நடிகை குறித்து பார்ப்போம்.

இட்லிக்கடையில் சூடாக இரண்டு டீ மற்றும் மீண்டும் தனுஷ் உடன் ஜோடிசேர்ந்த நித்யா மேனன் மற்றும் தேசிய விருது வாங்கிய கையோடு சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த நித்யா மேனன் குறித்துப் பார்ப்போம்.
நடிகர் தனுஷ் இயக்குநர் அவதாரம் எடுத்து முதன்முறையாக இயக்கி, ஒரு சிறிய ரோலில் நடித்த படம், பவர் பாண்டி என்கிற ப. பாண்டி. அதன்பின், தனது 50ஆவது படமான ’ராயன்’ படத்தை தனுஷ் எழுதி, இயக்கி, நடித்திருந்தார். இந்நிலையில், தனது அக்கா மகனை கதையின் நாயகனாக வைத்து, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்னும் காதல் படத்தை இயக்கினார்.
இப்படம் இன்னும் ரிலீஸாகாத நிலையில், தனது சொந்த மாவட்டமான தேனியில் வைத்து ’இட்லி கடை’ என்னும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இது தன்னுடைய 52ஆவது படம் என்றும், தன் இயக்கத்தில் வெளிவரும் நான்காவது படம் என்று நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.