நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு முதன்முறையாக சந்தித்த நாக சைதன்ய-சோபிதா.. வைரலாகும் வீடியோ!
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோர் நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு முதல் முறையாக பொதுவில் ஒன்றாகக் சந்தித்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

தென் இந்திய சினிமாவில் ஸ்டார் தம்பதிகளாக இருந்த நாக சைதன்யா - சமந்தா ஆகியோர் இருந்தனர். கடந்த 2017இல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், 2021 கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர். இதைடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் நாக சைதன்யா, தெலுங்கு நடிகை சோபிதா துலிபாலா ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு விருது
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகசைதன்யா - சோபிதா இடையிலான உறவு குறித்தும், டேட்டிங் குறித்தும் உலா வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்த ஜோடிக்கு இருவரின் குடும்பத்தார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனை நாக சைதன்யாவின் தந்தையும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்தார்.
தற்போது நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திங்கள்கிழமை (அக்டோபர் 28) மாலை நடைபெற்ற ஏ.என்.என்.ஆர் தேசிய விருது விழாவில் இருவரும் காணப்பட்டனர். இந்த விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு விருது வழங்கினார்.