நிலம் வந்துருச்சு..சொந்த நிலத்தை மீட்க 20 ஆண்டு சட்ட போராட்டம்!கவுண்டமணி கைக்கு வந்த ரூ. 50 லட்சம் மதிப்பு சொத்து
சொந்த நிலத்தை மீட்க 20 ஆண்டு சட்ட போராட்டம் நடத்திய நிலையில், ரூ. 50 லட்சம் மதிப்பு சொத்து கவுண்டமணி கைக்கு வந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

நிலம் வந்துருச்சு..சொந்த நிலத்தை மீட்க 20 ஆண்டு சட்ட போராட்டம்!கவுண்டமணி கைக்கு வந்த ரூ. 50 லட்சம் மதிப்பு சொத்து
தமிழ் சினிமா ரசிகர்களால் காமெடி கிங் என கொண்டாடப்படும் நடிகர் கவுண்டமணி, வணிக வளாகம் கட்டுவதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொடுத்த நிலத்தை அவரிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு தனி நீதிபதி பிறபித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கவுண்டமணிக்கு சொந்தமான நிலம் தற்போது முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
கடந்த மார்ச் மாதத்தில் கவுண்டமணி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.