'நானே கண்டுபிடிக்குறேன்' திட்டம் போட்டு வீட்டிற்கு வந்த கயல்.. தவிக்கும் குடும்பம்.. கயல் இன்றைய எபிசோட்
வீட்டில் நடக்கும் பிரச்சனை என்ன என்று தன்னிடம் குடும்பத்தார் சொல்ல மறுப்பதால், கயலே நேரடியாக களத்தில் இறங்கி என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடிக்க திட்டம் தீட்டியுள்ளார்.

'நானே கண்டுபிடிக்குறேன்' திட்டம் போட்டு வீட்டிற்கு வந்த கயல்.. தவிக்கும் குடும்பம்.. கயல் இன்றைய எபிசோட்
கயல் குடும்பம் கல்யாண செலவுக்காக வாங்கிய மொத்த பணத்தையும் திருப்பித் தரவேண்டும் என சிவசங்கரியின் பேச்சைக் கேட்டு வட்டிக்காரர் கயல் வீட்டில் தகராறு செய்கிறார்.
தவறு நடப்பதை உணரும் கயல்
இந்நிலையில், நம் வீட்டில் ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த கயல் அவசர அவசரமாக வீட்டிற்கு வருகிறார். அங்கு வந்த சமயத்தில் வீட்டில் உள்ளவர்களின் முகம் மாறி இருப்பதைப் பார்த்து என்ன நடந்தது என விசாரிக்கிறார். ஆனால், அவரிடம் எந்த உண்மையையும் கூற வீட்டில் உள்ளவர்கள் தயாராக இல்லை.
கயலுடன் கூட்டு சேர்ந்த எழில்
இதனால், வீட்டில் உள்ளவர்களிடம் கயல் சண்டை போடுகிறார். இருந்தும் யாரும் எதுவும் சொல்லாததால், கயல், வீட்டிற்கு சென்று எழிலிடம் தன் வீட்டில் ஏதோ பிரச்சனை உள்ளது போல் தோன்றுவதாக கூறுகிறார். பின் கயலுடன் எழிலும் கயல் வீட்டிற்கு செல்கிறார்.