தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Promo: குற்றவாளியா? - வாய்யை விட்டு மாட்டிக்கொண்ட கயல்.. அடுத்து என்ன நடக்கும்?

Kayal Promo: குற்றவாளியா? - வாய்யை விட்டு மாட்டிக்கொண்ட கயல்.. அடுத்து என்ன நடக்கும்?

Aarthi V HT Tamil
Sep 02, 2023 11:18 AM IST

கயல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

கயல்
கயல்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனந்தி தனக்கு தொல்லை கொடுத்த எழிலின் தம்பி பிரபுவை கொலை செய்துவிடுகிறாள்.

இந்த உண்மை கயலுக்கு தெரியவர தங்கையை காப்பாற்ற அவளின் உதவியுடன் பிரபுவின் சடலத்தை ஒரு மூட்டையில் கட்டி புதைத்து விட்டார்கள். இப்படி பரபரவென சென்று கொண்டு இருக்கிறது.

நேற்றைய எபிசோட்டில் கயல் மறைத்து வைத்து இருக்கும் கொலை சம்பவம் பற்றி காவல் துறையினருக்கு தெரியவர, பெரியப்பா ஏற்றிவிட்டார். இதன் விளைவாக கயல் மீது மேலும் சந்தேகம் அதிகரித்து இருக்கிறது.

திருமண சீசன் முடிந்த நிலையில் அடுத்து இந்த டாப்பிக் ஹாட்டாக மாறி இருக்கிறது.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. பிரபு விஷயத்தில் எங்களை விசாரணை செய்வது சரியில்லை. நீங்கள் நினைத்தால் நாங்கள் குற்றவாளி ஆக முடியாது என கயல் சொல்ல உடனே காவல் துறையினர், நாங்கள் உங்களை குற்றவாளி என சொல்லவே இல்லையே என கூறினார். மறுபுறம், கயலுக்காக காத்திருந்த படியே யோசனையில் இருக்கிறார் எழில்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்