தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஆனந்தை கைது செய்ய வந்த போலீஸ்‌.. மீனாட்சிக்காக தீபா செய்த விஷயம்.. கார்த்திகை தீபம்

ஆனந்தை கைது செய்ய வந்த போலீஸ்‌.. மீனாட்சிக்காக தீபா செய்த விஷயம்.. கார்த்திகை தீபம்

Aarthi Balaji HT Tamil
Mar 23, 2024 05:38 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திகை தீபம் அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆனந்த் ரியாவுடன் வீட்டுக்கு வந்து அதிர்ச்சி கொடுக்க இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கார்த்திக் மற்றும் தீபா இருவரும் ஆனந்த் மற்றும் ரியாவை தேடி கோயில் கோயிலாக அலைய, ஒரு கோயிலுக்குள் ஆனந்த் ரியா கழுத்தில் தாலி கட்டி நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு கார்த்திக் ஆனந்தை சந்தித்து சத்தம் போட ,அவன் உன் பொண்டாட்டி மட்டும் என்ன ஒழுக்கமா பொய் சொல்லி தானே உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என தீபாவை வம்புக்கு இழுக்கிறான்.

அதாவது அபிராமி அவனை அறைய வீட்டில் உள்ள எல்லோரும் ஆனந்தை நிற்க வைத்து கேள்வி கேட்க நீங்க யாரும் இந்த விஷயத்துல எதுவும் பேசக்கூடாது அதுக்கான தகுதி உங்க யாருக்கும் கிடையாது என சொல்கிறான்.

இதையடுத்து நான் மீனாட்சியிடம் பேசுகிறேன் என்று அவன் மீனாட்சியிடம் பேச போக உடைந்து போயிருக்கும் மீனாட்சி அவனை கண்டுபிடித்து இனிமே உன் கூட வாழ்றதுல எந்த அர்த்தமும் கிடையாது என கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி எரிகிறாள். இதை விரக்தியில் வீட்டை விட்டு வெளியேற தீபா அவளை தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறாள்.

இந்த நேரத்தில் நீங்க வீட்டை விட்டு வெளியே போனா அது சரியா இருக்காது. உங்க வீட்டுக்கு போனாலும் அவங்க விஷயம் தெரிஞ்சு ரொம்ப வருத்தப்படுவாங்க, நீங்க இந்த வீட்டுக்கு கூட வர வேண்டாம் என அவுட் அவுஸ் அழைத்துச் செல்கிறாள். மீனாட்சி ஜானகி பிடித்து கதற தீபா கீழே கிடக்கும் தாலியை எடுத்து பூஜை செய்து மீனாட்சி அக்கா வாழ்க்கைல எந்த பிரச்சினையும் வரக்கூடாது அவங்க பழையபடி ஒன்று சேர்த்து வாழணும் என பிராத்தனை செய்கிறாள்.

எங்க வீட்டில் அபிராமி ரூமுக்குள் ஆனந்த் செய்ததை நினைத்து வருத்தத்தில் இருக்க அண்ணாமலை அபிராமியை தேற்ற முயற்சி செய்கிறார். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் இது என்ன புது ட்விஸ்ட், இத நமக்கு சாதகமா மாற்றிக்கணும் என பிளான் போடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும்போது இங்க ஆனந்த் யாரு என கேட்டு கட்டின பொண்டாட்டி இருக்கும்போது விவாகரத்து கூட வாங்காமல் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு வரியா? மீனாட்சி தான் உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க என்று கைது செய்ய வந்திருப்பதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காணத்தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்