கமல்ஹாசனின் இசைக்குரு..உலக அளவில் 25 ஆயிரம் இசை கச்சேரி! இந்திய இசையின் உலக அடையாளமாக திகழ்ந்த பாலமுரளிகிருஷ்ணா
கமல்ஹாசனின் இசைக்குரு, உலக அளவில் 25 ஆயிரம் இசை கச்சேரி, இந்திய இசையின் உலக அடையாளமாக திகழ்ந்த பாலமுரளிகிருஷ்ணா 8ஆம் நினைவு நாள் இன்று.

கர்நாடக இசைக்கலைஞர், பாடகர், இசையமைப்பாளர், கேரக்டர் ஆர்டரிஸ்ட் என பன்முகங்களுடன் கலைத்துறையில் பயணித்தவர் பாலமுரளி கிருஷ்ணா. சங்கீத கலாநிதி, தேசிய விருது, பதம்விபூஷண், செவ்வாலியே என பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான இவரது வாழ்க்கையில் ஆந்திராவில் தொடங்கி சென்னையில் முற்று பெற்றது.
இசைப்பயணம்
இசைக்குடும்பத்தில் பிறந்த பால முரளி கிருஷ்ணாவுக்கு இயல்பிலேயே இசை ஆர்வமானது தொற்றிக்கொண்டது. தனது 6 வயதில் முறையாக சங்கீதம் பயின்ற இவர், தனது 8வது வயதிலேயே தியாகராஜர் ஆராதணையை அரகேற்றி இளம் பாடகராக இசை உலகில் தன்னை நிருபித்து காட்டினார். சிறு வயதிலேயே சிறிய வயதிலேயே தனது இசை வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பதினைந்து வயதிலேயே 72 மேளகர்த்தா ராகங்களிலும் தேர்ச்சி பெற்று, ஒவ்வொன்றிலும் கீர்த்தனைகளை இயற்றினார்.
பாடகராக மட்டுமல்லாமல் வயலின், கஞ்சிரா, மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளையும் வாசித்த தனக்கென தனியொரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய இவர், கர்நாடக இசையில் கோலோச்சி வந்தார். பல்வேறு விதமான பரிசோதனை முயற்சிகளை கர்நாடக சங்கீதத்தில் மேற்கொண்டதில் முன்னோடியாக திகழ்ந்தார்.