Ilaiyaraaja : நான் இன்னும் சாதிக்கவில்லை.. இசையும் எனக்கு இயற்கையாக வருகிறது.. இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை - இளையராஜா!
Ilaiyaraaja Speech : கிராமத்தில் இருந்து இசை கற்றுக்கொள்வதற்காக, என்னுடைய அம்மா எனக்கு 400 ரூபாய் கொடுத்து அனுப்பினார்கள். அப்போ இசை என்றால் என்னவென்று தெரியாது, வந்து இத்தனை நாள் ஆனபோதும், இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை.

மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
9 ஆவது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் தொடங்கியது. இந்த மாநாடு இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு மற்றும் எம்.பி.யும், இசையமைப்பாளருமான இளையராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஒருவாரம் நடைபெற உள்ள இந்த மாநாடு வரும் 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஐ.ஐ.டி. மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணியில் "மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்" துவங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை
இதில் பேசிய இளையராஜா இது ஒரு முக்கியமான நாள் என்னுடைய வாழ்க்கையில, ஒரு சின்ன பையன், அது நான் தான். கிராமத்தில் இருந்து இசை கற்றுக்கொள்வதற்காக, என்னுடைய அம்மா எனக்கு 400 ரூபாய் கொடுத்து அனுப்பினார்கள். அப்போ இசை என்றால் என்னவென்று தெரியாது, வந்து இத்தனை நாள் ஆனபோதும், இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை.