'வேட்டையனுக்கு கள்ளிப் பால் ஊத்தி கொன்னுட்டாங்க.. அத யாரும் கேள்வி கேக்கல' ஆதங்கப்படும் டைரக்டர்
வேட்டையன் படத்திற்கு எதிர் கருத்து உள்ள சில நபர்கள் கள்ளிப் பால் ஊற்றி கொன்றுவிட்டார்கள் என அப்படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் ஆதங்கமாக பேசியுள்ளார்.

'வேட்டையனுக்கு கள்ளிப் பால் ஊத்தி கொன்னுட்டாங்க.. அத யாரும் கேள்வி கேக்கல' ஆதங்கப்படும் டைரக்டர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'வேட்டையன் - தி ஹண்டர்' திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
நட்சத்திர பட்டாளம் நடித்த வேட்டையன்
இப்படத்தில் நடிகர் ரஜினி காந்த் மட்டுமின்றி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாளம் மட்டுமின்றி தென்னிந்தியாவையே தனது நடிப்பால் கலக்கிவரும் பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
வேட்டையன் பட இயக்குநர் த.செ. ஞானவேலின் முந்தைய திரைப்படமான ஜெய்பீம் ஏற்படுத்திய தாக்கத்தால் அவருக்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர். படம் வெளியாகும் முன்னே அனிருத் இசையில் வெளியான பாடல்கள் ஹிட் அடித்து படத்திற்கு மேலும் ஹைப் கொடுத்தன.