Bharathiraja:தமிழ்தாய் வாழ்த்தில் திருத்தம்; கைகும்பிடு எதற்கு? - பாரதிராஜா!
பிரபல இயக்குநர் பாரதிராஜா தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடுவதில் தனக்கு வருத்தம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ளே நட்டலாம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவில் பிரபல இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டார்
ட்ரெண்டிங் செய்திகள்
தமிழ்தாய் வாழ்த்து பாடுவதில் தனக்கு வருத்தம்!
அப்போது பேசிய அவர், “தமிழ்தாய் வாழ்த்து பாடலில் எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே என்று பாடுகிறோம். அப்படியானால் ஏற்கனவே எத்திசையும் புகழ் மணக்க இருந்த தமிழ் இப்போ இல்லையா?.. ஆகையால் எத்தி செய்யும் புகழ் மணக்க இருக்கின்ற தமிழே அதில் மாற்றம் ஏற்பட வேண்டும்” என்றார்.
கையை தலைமீது உயர்த்தி கும்பிடுவது எதற்கு?
மேலும் பேசிய அவர், “நான் கையை தலைமீது உயர்த்தி கும்பிடுவது என்பதுதான் என்னுடைய அடையாளம்; அதற்கு காரணம் இருக்கிறது.. தமிழக கோயில் கோபுரங்கள் அப்படித்தான் இருக்கும். நீங்கள் என் கோயில் போன்றோர்கள் என் இனிய தமிழ் மக்களே.. அதுதான் அப்படி வணங்குகிறேன்.” என்று பேசியிருக்கிறார்.
டாபிக்ஸ்