ஷண்முகம் குடும்பத்துக்கு வந்த திருட்டு பழி.. கைதாக போவது யார்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!
Anna Serial : ஷண்முகம் குடும்பத்துக்கு வந்த திருட்டு பழி. கைதாக போவது யார்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி கடன் வாங்கி உடனே ரத்னாவுக்கு நகை போடணுமா என்று பரணி பேசியதை ரத்னா தப்பாக புரிந்து கொண்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கோபப்படும் ஷண்முகம்
அதாவது, பரணி சென்றதும் ரத்னா இனிமே எனக்கு எது பண்றதாக இருந்தாலும் பரணி கிட்ட கேட்டு பண்ணு. நானும் வேலைக்கு போறேன்ல, எது பண்ணாலும் என்னுடைய சம்பாதியத்தில் பண்ணு என்று சொல்ல ஷண்முகம் என் கடமையை நான் பண்றேன் என்று கோபப்படுகிறான்.
பரணி ரத்னா தன்னை தவறாக புரிந்து கொண்டதையும் அறிந்து கொள்கிறாள். இது பற்றி பேசி வருத்தப்பட்ட ரத்னா மீண்டும் பரணியை காயப்படுத்துவது போல் பேசுகிறாள். இன்ஸ்பெக்டர் அனுப்பிய ஆட்கள் வீட்டிற்கு வெளியே நின்று பரணி மற்றும் ஷண்முகம் வீட்டில் இருக்கிறார்களா என்று நோட்டம் விடுகின்றனர்.