ஷண்முகம் குடும்பத்துக்கு வந்த திருட்டு பழி.. கைதாக போவது யார்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஷண்முகம் குடும்பத்துக்கு வந்த திருட்டு பழி.. கைதாக போவது யார்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!

ஷண்முகம் குடும்பத்துக்கு வந்த திருட்டு பழி.. கைதாக போவது யார்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!

Divya Sekar HT Tamil Published Oct 11, 2024 12:59 PM IST
Divya Sekar HT Tamil
Published Oct 11, 2024 12:59 PM IST

Anna Serial : ஷண்முகம் குடும்பத்துக்கு வந்த திருட்டு பழி. கைதாக போவது யார்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் பார்க்கலாம்.

ஷண்முகம் குடும்பத்துக்கு வந்த திருட்டு பழி.. கைதாக போவது யார்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!
ஷண்முகம் குடும்பத்துக்கு வந்த திருட்டு பழி.. கைதாக போவது யார்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ!

கோபப்படும் ஷண்முகம்

அதாவது, பரணி சென்றதும் ரத்னா இனிமே எனக்கு எது பண்றதாக இருந்தாலும் பரணி கிட்ட கேட்டு பண்ணு. நானும் வேலைக்கு போறேன்ல, எது பண்ணாலும் என்னுடைய சம்பாதியத்தில் பண்ணு என்று சொல்ல ஷண்முகம் என் கடமையை நான் பண்றேன் என்று கோபப்படுகிறான்.

பரணி ரத்னா தன்னை தவறாக புரிந்து கொண்டதையும் அறிந்து கொள்கிறாள். இது பற்றி பேசி வருத்தப்பட்ட ரத்னா மீண்டும் பரணியை காயப்படுத்துவது போல் பேசுகிறாள். இன்ஸ்பெக்டர் அனுப்பிய ஆட்கள் வீட்டிற்கு வெளியே நின்று பரணி மற்றும் ஷண்முகம் வீட்டில் இருக்கிறார்களா என்று நோட்டம் விடுகின்றனர்.

அடுத்து நடக்க போவது என்ன?

கொஞ்ச நேரத்தில் போலீஸ் வீட்டிற்கு வந்து நீங்க கோவில் நகையை திருடியதாக தகவல் வந்திருப்பதாக சொல்ல அதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். டாக்டர், தர்மகத்தா, டீச்சர் என எல்லாரும் நல்ல பதவியில் இருக்கும் போது நாங்க எதுக்கு திருடனும் என வாக்குவாதம் செய்கின்றனர்.

அதன் பிறகு வீட்டிற்குள் வந்த ஷண்முகம் அம்மா போட்டோ முன்னாடி வைத்த நகைகளை பிரித்து பார்க்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? நகை திருட்டு கேசில் பரணி கைதாவாளா? என்பதை அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.