தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anjali: பிச்சைக்கார்களுடன் படுக்க வைத்த இயக்குநர் - கடுப்பான அஞ்சலி

Anjali: பிச்சைக்கார்களுடன் படுக்க வைத்த இயக்குநர் - கடுப்பான அஞ்சலி

Aarthi V HT Tamil
Jul 08, 2023 11:18 AM IST

நடிகை அஞ்சலி அங்காடி தெரு படம் தொடங்கிய போது இயக்குநர் வசந்த பாலன் மீது வருத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஞ்சலி
அஞ்சலி

ட்ரெண்டிங் செய்திகள்

கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் இயக்குநர் ராம் அவரை அறிமுகம் செய்து வைத்தார். அடுத்ததாக வசந்த பாலன் இயக்கிய 'அங்காடித் தெரு' படத்தில் நாயகி நடித்து இருந்தார். சென்னைக்குப் பிழைப்புத் தேடி வரும் பெண்கள் துணிக்கடையில் எவ்வாறு சிறம்படுகிறார்கள் என்பதை காண்பித்து இருப்பார். அவர் நடிப்பு ரசிகர்களை கிளைமேக்சில் கண்டிப்பாக அழு வைத்து இருக்கும். இதில் அவர் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில அரசின் விருதைப் பெற்றார்.

இந்த படத்தின் கதைக்கு அஞ்சலி தான் சரியாக இருப்பார் என நினைத்து அவரிடம் கதை சொல்லி உள்ளார் இயக்குநர் வசந்த பாலன். அஞ்சலியும் கதையை கேட்டுவிட்டு பிடித்துபோக உடனே நடிக்க சம்மதம் சொல்லி உள்ளார்.

பின்னர் ஜவுலி கடைக்கு அழைத்து சென்று அங்கு நடக்கும் அனைத்தையும் காட்டுவிட்டு படப்பிடிப்புக்கு சென்று இருக்கிறார்.

இந்நிலையில் அங்காடி தெரு படம் தொடங்கிய போது பிடித்த அஞ்சலிக்கு நாட்கள் செல்ல செல்ல இயக்குநர் வசந்த பாலன் படப்பிடிப்பில் செய்யும் விஷயங்கள் பிடிக்காமல் போய் உள்ளது. குறிப்பாக பிச்சைக்கார்களுடன் சாலையில் படுக்க வைத்து எடுத்த காட்சி அவருக்கு பிடிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் இயக்குநர் மீது கோபம் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் படம் வெளியான பிறகு அந்த சீன்களை பார்த்து மனம் மாறிவிட்டாராம் அஞ்சலி. இந்த படம் தான் அஞ்சலியின் திரைவாழ்க்கையில் மிக முக்கிய அங்கமாக மாறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்