தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Amitabh Bachchan: அமிதாப், அனுஷ்கா சர்மாவுக்கு அபராதம் விதித்த மும்பை போலீஸ்! என்ன காரணம் தெரியுமா?

Amitabh Bachchan: அமிதாப், அனுஷ்கா சர்மாவுக்கு அபராதம் விதித்த மும்பை போலீஸ்! என்ன காரணம் தெரியுமா?

Pandeeswari Gurusamy HT Tamil
May 18, 2023 12:07 PM IST

மும்பை டிராபிக் போலீஸார் அமிதாப்பட்சன், அனுஷ்கா சர்மா இருவரிடமும் அபராதம் வசூலித்துள்ளனர்

அனுஷ்கா சர்மா - அமிதாப்பட்சன்
அனுஷ்கா சர்மா - அமிதாப்பட்சன்

ட்ரெண்டிங் செய்திகள்

பாலிவுட்டின் ‛பிக் பி' என அழைக்கப்படும் அமிதாப் பச்சன், தற்போதும் இளம் நடிகர்களுக்குப் போட்டியாகப் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது பிரபாஸ் நடித்து வரும் பான் இந்தியா படமான ‛புரொஜெக்ட் கே' படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்தது. அஸ்வின் தத் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு (2024) பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் எப்போதும் படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்லக்கூடியவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன் மும்பையில் படப்பிடிப்புக்கு செல்லும் போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டார்.

இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லவேண்டும் என்பதற்காக அவசரத்தில் வழியில் கிடைத்த இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு பின்னால் அமர்ந்து சென்றார். அவர் அவ்வாறு அமர்ந்து செல்லும் போது அமிதாப்பச்சனும், இருசக்கர வாகனத்தை ஓட்டியவரும் ஹெல்மெட் அணியவில்லை.

இரு சக்கர வாகனத்தில் சென்றதை அமிதாப்பச்சன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதே போன்று கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் மும்பையில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கினார். அப்போது தனது பாதுகாவலரின் இரு சக்கர வாகனத்தில் படப்பிடிப்புக்கு சென்றார். இதையடுதது அமிதாப் பச்சன் போன்று நானும் இருசக்கர வாகனத்தில் சென்றேன் என்று கூறி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டார்.

அதில் அனுஷ்கா சர்மாவும் ஹெல்மெட் அணியாமல்தான் இரு சக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து சென்றார். இது குறித்து நெட்டிசன்கள் இருவரையும் கடுமையாக விமர்சித்தனர். அதோடு இது தொடர்பாக சிலர் மும்பை போலீஸ் சோசியல் மீடியாவிலும் சுட்டிக்காட்டினர். இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மும்பை போலீஸார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மும்பை டிராபிக் போலீஸார் இருவரிடமும் அபராதம் வசூலித்துள்ளனர். ஒரு இரு சக்கர வாகன ஓட்டியிடம் ரூ.10500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை தவறு செய்தவர் கட்டிவிட்டதாக மும்பை போலீஸார் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், படப்பிடிப்பு தளத்தில் ஆக்ஷன் காட்சியின் போது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. இதில் அவரின் விலா எலும்பு பகுதி உடைந்தது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தில் அவருக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, புரொஜெக்ட் கே படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது காயங்களில் இருந்து குணமடைந்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்