வில்லன் நடிகர் மனைவி கைது, தவெக கட்சியில் இணைந்த நடிகர்..அமரன் ஓடிடி ரிலீஸ்! டாப் சினிமா செய்திகள் இன்று
சூர்யா சாமி தரிசனம், வில்லன் நடிகர் மனைவி கைது, தவெக கட்சியில் இணைந்த வாழை பட நடிகர், அமரன் ஓடிடி ரிலீஸ் உள்பட டாப் தமிழ் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.

சூர்யா படத்தில் இணைந்த லப்பர் பந்து நடிகை
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படம் ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. சூர்யா 45 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் த்ரிஷா கதையின் நாயகியாக நடிக்கிறார். இதையடுத்து படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் லப்பர் பந்து படத்தில் நடித்த ஸ்வாஸிகா நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
வில்லன் நடிகரின் மனைவி கைது
தெலுங்கு சினிமாவில் வில்லன் நடிகராக இருப்பவர் அஜாஸ் கான். கடந்த அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி அஜாஸ் கானின் அலுவலக ஊழியர் சுராஜ் கௌத் ஐரோப்பிய நாட்டில் இருந்து 100 கிராம் மெஃபெடிரோன் (Mephedrone-MD) என்ற என்ற போதைப் பொருளை ஆர்டர் செய்திருந்தார். இந்த கொரியர் அஜாஸ் கானின் அந்தேரி அலுவலகத்துக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சுராஜை சுங்கத்துறை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அஜாஸ் கான் மனைவி ஃபாலன் குலிவாலாவுக்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் அஜாஸ் கானிந் ஜோதேஷ்வரி குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டதில் 130 கிராம் எடை மரிஜூவானா உள்பட மேலும் சில போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதையசுக்கு குலிவாலா கைது செய்யப்பட்டுள்ளார்