மனைவி வராததால் கோபித்துக்கொண்டு அம்மா வீடு போனேன்..பின் பாசமாக பேசி அழைத்து அடித்து துவைத்த மனைவி.. அகோரி கலையரசன் பகீர்
மனைவி வராததால் கோபித்துக்கொண்டு அம்மா வீடு போனேன்..பின் பாசமாக பேசி அழைத்து அடித்து துவைத்த மனைவி.. அகோரி கலையரசன் பகீர் பேட்டியளித்துள்ளார்.

தன் மனைவி தன்னோடு வாழ வராததால், கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போயிட்டேன் என்றும், அதன்பின் பாசமாகப் பேசி அழைத்து தன் மனைவி தன்னை அடித்து கொடுமைப்படுத்தினார்கள் எனவும் இன்ஸ்டா பிரபலம் அகோரி கலையரசன் பரபரப்பு பேட்டிக்கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘’என் மனைவியை தனிக்குடித்தனம் நடத்தச்சொல்லி அழைத்தேன். அவங்க என்ன சொன்னாங்க என்றால், அவங்களுடைய குடும்பத்தினரோடு தான் இருப்போம்ன்னு சொன்னாங்க. அதனால் நான் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போயிட்டேன். அம்மா வீட்டில் இருந்து ரொம்பப் பாசமாகப் பேசிறமாதிரி வரவழைச்சாங்க.
திண்டிவனத்தில் ஒரு இடம் விஷயமாகப் போயிருந்தோம். அதை முடிச்சிட்டு நைட் வீட்டுக்கு வந்ததும் கதவை மூடிக்கிட்டு, செல்போன் எல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டு, சாகுடா சாகுடான்னு சொல்லி அடிச்சு சித்திரவதை பண்ணுனாங்க.
