20 ஆண்டுகளுக்கு பின் இணையப்போகும் ஜோடி! சூர்யா 45 இல் த்ரிஷா? புது அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  20 ஆண்டுகளுக்கு பின் இணையப்போகும் ஜோடி! சூர்யா 45 இல் த்ரிஷா? புது அப்டேட்!

20 ஆண்டுகளுக்கு பின் இணையப்போகும் ஜோடி! சூர்யா 45 இல் த்ரிஷா? புது அப்டேட்!

Suguna Devi P HT Tamil
Published Nov 21, 2024 08:40 PM IST

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் நடிகர் சூர்யா, இவரது பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு பின் இணையப்போகும் ஜோடி! சூர்யா 45 இல் த்ரிஷா? புது அப்டேட்!
20 ஆண்டுகளுக்கு பின் இணையப்போகும் ஜோடி! சூர்யா 45 இல் த்ரிஷா? புது அப்டேட்!

இந்த நிலையில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்து வெளியான படம் கங்குவா, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியானது.  இப்படத்தினை தயாரிபாலர் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். இந்த திரைப்படம் வெளியானதில் இருந்து படம் குறித்து பல எதிர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் இப்படங்களை சுற்றி பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன. 

ரிவ்யூக்களுக்கு தடை 

இப்படத்தின் ரிவ்யூக்களை தொடர்ந்து பல மக்கள் தியேட்டர்களுக்கு செல்லாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் தியேட்டர்களை விட்டு வெளியே வந்தவுடன் ரிவியூ எடுக்கும் youtube சேனலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு பல  சர்ச்சைகளுக்குள் சிக்கிய கங்குவா திரைப்படம் சரியாக ஓடவில்லை. எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.  மேலும் இதனை அடுத்து சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படிப்பிடிப்பு காட்சிகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. 

 இப்படம் 2025 ஆம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனை அடுத்து இயக்குனர் சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் நடிக்க இருந்தார். திடீரென சூர்யா அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதனை அடுத்து தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ஒரு படத்தில் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் குறித்தான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன. 

த்ரிஷாவுடன் ஜோடி 

 தற்போது இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நடிகை திரிஷா முதன் முதலில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான மௌனம் பேசியதே படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து இருந்தார். அதனை அடுத்து ஆறு படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். மேலும் நடிகர் கமல் ஹாசனின் மன்மதன் அம்பு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடி இருந்தனர். தற்போது 20 ஆண்டுகளுக்கு பின்னர் சூர்யா மற்றும் திரிஷா இருவரும் சேர்ந்து நடிக்க உள்ளனர். இவர்கள் நடித்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பு பெற்று இருந்தது. இருப்பினும் இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக இணைந்து நடிக்கவில்லை. தற்போது இருவரும் இணைந்து உள்ளதாக இணைந்து இணைந்து நடிக்க இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை குஷி படித்து உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.