'சூர்யா நீ ஒரு மடசாம்பிராணி.. பொண்டாட்டினு சொல்லிட்டு.. என்ன மாதிரி பொம்பள அவ' ஜோதிகாவை கீழ்தரமாக பேசிய சுசித்ரா
கங்குவா பட விமர்சனங்கள் குறித்து நடிகை ஜோதிகா கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய சுசித்ரா, ஜோதிகாவை மிகவும் கீழ்தரமான வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகர் சூர்யாவின் சினிமா வரலாற்றில் மாபெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக உருவானது கங்குவா. இந்தப் படத்தை உலகம் முழுவதும் 11,500 தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா திட்டமிட்ட நிலையில், படம் வெளியான முதல் நாளில் இருந்தே படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன.
மோசமான விமர்சனத்தை சந்தித்த கங்குவா
இதனால், படத்தின் வசூல் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி, இது படத்தின் மீதான விமர்சனமாக இல்லாமல் சூர்யா மீதான தனிப்பட்ட விமர்சனமாக அமைந்தது.
இதையடுத்து, சூர்யாவின் மனைவி ஜோதிகா, கங்குவா திரைப்படம் குறித்தும், அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் பேசி இருந்தார். இதைக் கண்ட பாடகி சுசித்ரா, ஜோதிகாவை மிக மோசமாக, கீழ்த்தரமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், தான் இதை மீடியா விளம்பரத்திற்காக செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.