Sharmila:சூட்டிங்கின் இறுதி நாள்..தன்னை ரேப் செய்யமுயன்ற மலையாள புரொடியூசர்.. நடிகை சர்மிளா பேட்டி
Sharmila:சூட்டிங்கின் இறுதி நாள்..தன்னை ரேப் செய்யமுயன்ற மலையாள புரொடியூசர்.. ஓடிவந்து காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் பற்றி நடிகை சர்மிளா பேட்டியளித்துள்ளார்.

Sharmila: சூட்டிங்கின் இறுதி நாளில் தன்னை ரேப் செய்யமுயன்ற மலையாள புரொடியூசரிடம் இருந்து ஆட்டோ டிரைவர்கள் காப்பாற்றியதாக நடிகை சர்மிளா பகீர் குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளத் திரையுலகில் 2016ஆம் ஆண்டு நடிகைகளுக்கு, பாலியல் தொல்லைகள் கொடுப்பதாகப் புகார் எழுந்தது. இதனை விசாரிக்க கேரள அரசின் சார்பில் ஹேமா என்ற ஓய்வுபெற்ற நீதிபதியின்கீழ் குழு அமைக்கப்பட்டு, 2019ஆம் ஆண்டு விசாரணை அறிக்கையைப் பெற்றது, கேரள அரசு. இந்நிலையில் சில ஆண்டுகளாக இதுபற்றிய எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஹேமா விசாரணைக்குழுவின் அறிக்கை வெளியாகியிருந்தது.
அதில் கேரளாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர், நடிகைகளுக்கும், துணை நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் முன்னணி நடிகர்களான முகேஷ், இயக்குநர் சித்திக் மற்றும் பலர் மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. இதைத் தொடர்ந்து நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ் முன் ஜாமீன் பெற்றார். இந்நிலையில் கேரளாவின் முன்னணி நடிகர் சங்கமான அம்மா சங்கத்தின் தலைவராக இருந்த மோகன் லால் உள்ளிட்டப் பலர் எந்தவொரு காரணத்தையும் சொல்லாமல், விசாரணைக்குப் பதில் சொல்ல சங்கடப்பட்டு தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.