Samantha: தெலுங்கு துறைக்கு இது கண்டிப்பா தேவை.. முக்கியமான கோரிக்கை வைத்த சமந்தா!
Samantha: மலையாள திரையுலகில் பாலியல் தொல்லைகள் குறித்து நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையை அடுத்து சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samantha: தெலுங்கு துறைக்கு இது கண்டிப்பா தேவை.. முக்கியமான கோரிக்கை வைத்த சமந்தா!
Samantha: திரையுலகம் என்பது வெறும் வண்ணமயமான உலகம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இதில் தீய செயல்களும் நடைபெறுகின்றன என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிலர் பல சமயங்களில் தகவல் கொடுத்தாலும்.. பலரும் பொருட்படுத்துவதில்லை. மலையாள திரையுலகில் சமீபகாலமாக காஸ்டிங் கவுச் ஊழல் அனைத்து துறைகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக மாறியுள்ளது.
மலையாள திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வந்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இந்த அறிக்கைக்குப் பிறகு ஒவ்வொரு துறையிலும் உள்ள நடிகர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள். சமீபத்தில், இந்த அறிக்கைக்கு பதிலளித்த சமந்தா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரியை வெளியிட்டார்.