சுசித்ரா, சின்மயி பழிவாங்க பேசுறாங்க.. வேட்டைக்காரியா இருந்தாலும் நான் ஜோக்கர் தான்.. நடிகை சொன்ன சீக்ரெட்
பாடலாசிரியர் வைரமுத்துவை பழிவாங்கும் நோக்கத்தில் பாடகி சுசித்ராவும், சின்மயியும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என நடிகை சஞ்சனா சிங் கூறியுள்ளார்.

தமிழில் ரேனிகுண்டா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சஞ்சனா சிங். இவர், இதைத் தொடர்ந்து, கோ, அஞ்சான், நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், அவர் தற்போது வேட்டைக்காரி எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். காளிமுத்து காத்தமுத்து இயக்கியுள்ள இப்படத்தை விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரித்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், நடிகை சஞ்சனா நக்கீரன் ஸ்டூடியோவிற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
நான் குத்துப் பாட்டிற்கு ஆட வந்தவள் இல்லை
அதில் பேசிய நடிகை சஞ்சனா, நடிகர் விஜய் நடிப்பில் வேட்டைக்காரன் படம் வந்தது. அதுபோல எனக்கு வேட்டைக்காரி என்ற படம் கிடைத்துள்ளது. இதில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன் என்றார். என்னைப் பலரும் சினிமா குத்து பாடலுக்கு நடனமாடுபவர் எனக் கூறுகின்றனர். நான் தமிழில் நடித்த முதல் படம் ரேணிகுண்டா. இதில் நான் ஒன்றும் குத்து பாட்டிற்கு ஆட வரவில்லை. நான் ஒரு நடிகை. அதிலிருந்து படிப்படியாக வந்தது தான் நடனமாடுவது எனக் கூறியிருந்தார். சினிமாவில், ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு உள்ளது. அதை முதலில் நிறுத்த வேண்டும்.