மக்கள் தலைவி..“சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றியதற்கு நன்றி”! ஜாமினுக்கு பிறகு கஸ்தூரி பேச்சு
புழல் சிறை வளாகத்தில் மக்கள் தலைவி கஸ்தூரி என அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட, செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தனக்கு ஆதரவாக இருந்த பலருக்கு நன்றிகளை தெரிவித்ததோடு, சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றியதற்கு நன்றி என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

மக்கள் தலைவி..“சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றியதற்கு நன்றி”! ஜாமினுக்கு பிறகு கஸ்தூரி பேச்சு
தெலுங்கு மக்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் எழும்பூர் காவல் நிலையத்தில் நாள்தோறும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சீறும் புயலாக மாறியுள்ளேன்
ஐந்து நாள்கள் சிறைவாசம் அனுபவித்த கஸ்தூரி, ஜாமினில் வ விடுவிக்கப்பட்டு வெளியே வந்தபோது சிறை வளாகத்தில் தன்னை வரவேற்க காத்திருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். அப்போது அவரை பார்த்து மக்கள் தலைவி என ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.
இதன் பின்னர் சிறை வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "என்னை குடும்பம் போல் பாதுகாத்த நண்பர்களுக்கு நன்றி. வழக்கறிஞர்களுக்கு நன்றி.