"சைதன்யாவோட கல்யாணத்துல தலையிட வேண்டாம்ன்னு சொல்லிட்டான்" மகனின் திருமணம் குறித்து பேசிய நாகார்ஜூனா
தன் திருமண வேலைகளைகளை தானே செய்து கொள்வதாக நாக சைதன்யா, அவரது தந்தை நாகார்ஜூனாவிடம் கூறியுள்ளாராம்.

Sobhita Dhulipala and Naga Chaitanya got engaged in August this year.
நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இவர்களின் திருமண ஏற்பாடுகள் எப்படி சென்று கொண்டிருக்கிறது என நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜூனா பேசியுள்ளார்.
பாரம்பரிய முறைப்படி திருமணம்
இதுகுறித்து அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசுகையில், சோபிதாவின் பெற்றோர் தங்களது மகளுக்கு ஒரு பாரம்பரிய தெலுங்கு திருமணத்தை நடத்த வேண்டும் என விரும்பினர். அதில் அவர்கள் உறுதியாகவும் இருந்தனர்.
இதனால், நாங்கள் எங்களது அன்னபூர்ணா ஸ்டூடியோவிலே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். இவர்களது திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ மிகவும் எளிமையாக நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் 300 முதல் 400 பேர் வரை மட்டுமே பங்கேற்க உள்ளனர்.