"மாலை டும் டும்.. மத்தளம் டும் டும்" வெளியானது நாக சைதன்யா கல்யாண பத்திரிக்கை.. ஹார்ட் விடும் ரசிகர்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "மாலை டும் டும்.. மத்தளம் டும் டும்" வெளியானது நாக சைதன்யா கல்யாண பத்திரிக்கை.. ஹார்ட் விடும் ரசிகர்கள்!

"மாலை டும் டும்.. மத்தளம் டும் டும்" வெளியானது நாக சைதன்யா கல்யாண பத்திரிக்கை.. ஹார்ட் விடும் ரசிகர்கள்!

Malavica Natarajan HT Tamil
Published Nov 17, 2024 01:13 PM IST

ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த நாக சைதன்யா திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குடும்பத்தினரால் அச்சடிக்கப்பட்டாதா அல்லது ரசிகர்கள் தயாரித்த ஒன்றா என்ற தகவல் இப்போது வரை வெளியாகவில்லை.

"மாலை டும் டும்.. மத்தளம் டும் டும்" வெளியானது நாக சைதன்யா கல்யாண பத்திரிக்கை.. ஹார்ட் விடும் ரசிகர்கள்!
"மாலை டும் டும்.. மத்தளம் டும் டும்" வெளியானது நாக சைதன்யா கல்யாண பத்திரிக்கை.. ஹார்ட் விடும் ரசிகர்கள்!

வைரலாகும் கல்யாண பத்திரிக்கை

வெளியான தகவலின் படி திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், சோபிதா- நாக சைதன்யா திருமண பத்திரிக்கை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தப் பத்திரிக்கையை பலரும் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்தத் திருமண பத்திரிக்கையில் இந்தியாவின் தென்மாநிலங்களின் பாரம்பரியங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த பத்திரிக்கையில் ஒரு கோயில், விளக்குகள், மாடுகள், மணிகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. மணமகன் மற்றும் மணமகளின் பெயர்களுடன் அவர்களின் குடும்ப விவரங்களும் இடம்பெற்றன. திருமண தேதி டிசம்பர் 4, 2024 ஆகும். இது ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிசுப் பொருளுடன் வந்த பத்திரிக்கை

திருமண பத்திரிகையுடன், ஒரு பரிசுக் கூடையும் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் உணவுப் பொட்டலங்கள், ஆடைகள், பூக்கள் போன்ற பொருட்கள் இடம் பெற்றிருக்கின்றன. இவை நாக சைதன்யா- சோபிதா துலிபாலா குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட பத்திரிகையா அல்லது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட பத்திரிகையா என்ற சந்தேகம் எழுகிறது.

சோபிதாவிற்கு மஞ்சள் சடங்கு

நாக சைதன்யா- சோபிதா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், மக்கள் இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், திருமணம் பற்றிய அறிவிப்புகளை இருவர் தரப்பிலிருந்தும் வெளிவராத நிலையில், கடந்த மாதம் சோபிதாவிற்கு உறவினர்கள் சூழ பாரம்பரிய முறைப்படி மஞ்சள் சடங்கு நடைபெற்றது. இதற்கான புகைப்படங்களை சோபிதா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

தெலுங்கு திருமணங்களில் முக்கிய சடங்காக இருக்கும் உலக்கை, உரலில் மஞ்சள் அடிக்கும் நிகழ்வு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் இவர்களின் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவியது.

திருமண நிச்சயதார்த்தம்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் நாக சைதன்யா, தெலுங்கு நடிகை சோபிதா துலிபாலா ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. . இதனை நாக சைதன்யாவின் தந்தையும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்தார். இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகசைதன்யா - சோபிதா இடையிலான உறவு குறித்தும், டேட்டிங் குறித்தும் உலா வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் செய்த சைதன்யா

சமந்தாவிடம் காதலை வெளிப்படுத்திய ஆக்ஸ்ட் 8ஆம் தேதியிலேயே, தற்போது சோபிதாவுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார் நாக சைதன்யா. கடந்த மே 2022இல் நாக சைதன்யா - சோபிதா ஜோடி முதல் முறையாக சந்தித்ததாக கூறப்படும் நிலையில், அவ்வப்போது ஐரோப்பிய நாடுகளில் இருவரும் ஜோடியாக ஊர் சுற்றியுள்ளனர்.நிச்சயதார்த்தம் முடியும் வரை தங்களுக்குள் இருக்கும் உறவை வெளிப்படுத்தவில்லை.

திரைக் குடும்பத்தின் திருமணம்

ஏனெனில், தெலுங்கு திரையுலகில் 3 தலைமுறையாக கோலோச்சி வருகிறது நாக சைதன்யாவின் குடும்பம், அதுமட்டுமின்றி, நாகார்ஜூனா தெலுங்கு மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளதால், அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். அதே சமயம், ஷோபிதாவும், டோலிவுட் மட்டுமல்லாமல், கோலிவுட், பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இதனால், இந்திய திரையுலகமே இவர்கள் இருவரின் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், இவர்கள் இருவரின் திருமண ஏற்பாட்டால் நடிகை சமந்தா ரசிகர்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.