Fact Check: ரவீந்திரநாத் தாகூரின் உருவப்படத்தை பிரதமர் மோடி தலைகீழாக வைத்திருந்தாரா?
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Fact Check: ரவீந்திரநாத் தாகூரின் உருவப்படத்தை பிரதமர் மோடி தலைகீழாக வைத்திருந்தாரா?

Fact Check: ரவீந்திரநாத் தாகூரின் உருவப்படத்தை பிரதமர் மோடி தலைகீழாக வைத்திருந்தாரா?

The Quint HT Tamil Published May 15, 2024 02:02 PM IST
The Quint HT Tamil
Published May 15, 2024 02:02 PM IST

PM Modi: பிரதமர் மோடியின் யூடியூப் சேனலில் முழு வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில், முதலில் தவறுதலாக தலைகீழாக போட்டோ ஃபிரேம் வழங்கப்பட்டாலும், உடனடியாக பாஜகவினர் அதை சரிசெய்ததை பார்க்க முடிகிறது.

Fact Check: ரவீந்திரநாத் தாகூரின் உருவப்படத்தை பிரதமர் மோடி தலைகீழாக வைத்திருந்தாரா?
Fact Check: ரவீந்திரநாத் தாகூரின் உருவப்படத்தை பிரதமர் மோடி தலைகீழாக வைத்திருந்தாரா?

2024 மக்களவைத் தேர்தலுக்காக மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சிக்காக பிரச்சாரம் செய்த பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் இந்த காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் இதனை ஷேர் செய்தனர். (Source: X/Screenshot)
திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் இதனை ஷேர் செய்தனர். (Source: X/Screenshot)

யார் பகிர்ந்தது?

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் (டி.எம்.சி) அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு இந்த சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. கட்சியின் எம்.பி.யான சகரிகா கோஷும் பிரதமர் கலைப்படைப்புகளை தலைகீழாக வைத்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இது உண்மையா?

இல்லை, வீடியோ கிராப் செய்யப்பட்டுள்ளதால் காட்சிகள் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது.

முழு வீடியோவில், பிரதமர் மோடியைச் சுற்றியுள்ளவர்கள் தவறை உணர்ந்து உடனடியாக அதை சரிசெய்தனர்.

ஆனால், ஸ்கிரீன்ஷாட் மட்டும் வைரலாகி வருகிறது.

உண்மையை எப்படி கண்டுபிடித்தோம்?: பிரதமர் மோடியின் மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த பேரணிகளின் காட்சிகளைத் தேட அவரது சரிபார்க்கப்பட்ட யூடியூப் சேனலுக்குச் சென்றோம்.

மே 13 அன்று மேற்கு வங்கத்தின் பாரக்பூரில் அவரது பிரச்சார உரையின் வீடியோவை அதில் காண முடிந்தது.

-இந்த வீடியோவில் 2:45 வது நிமிடத்தில், பிரதமர் கலைப்படைப்பைப் பெற எழுந்து நிற்பதைக் காணலாம்.

-தாகூரின் உருவப்படத்தை அவரிடம் முதலில் ஒப்படைக்கும்போது, அது தலைகீழாக உள்ளது,

இருப்பினும், பிரதமர் மோடியுடன் மேடையில் இருந்த மற்றவர்கள் விரைவாக தவறை சரிசெய்து போட்டோ ஃபிரேமை சரியாக வைத்தனர்.

பிரதமர் மோடி ரவீந்திரநாத் தாகூர் போட்டோவை தலைகீழாக சித்தரிக்கும் ஓவியத்தை வைத்திருக்கும் வீடியோ மற்றும் சூழலுக்கு அப்பாற்பட்ட ஸ்கிரீன் ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் நடந்தது இதுதான்.

பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்தி முதலில் தி குயின்ட் தளத்தில் வெளியிடப்பட்டது, மேலும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக எச்.டி டிஜிட்டலால் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

முன்னதாக, மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புடைசூழ பிரதமர் மோடி அரசு அலுவலகத்திற்கு சென்று தனது ஆவணங்களை ஒப்படைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பின்னர் அந்த அதிகாரி பெருந்தன்மையுடன் ஆவணங்களை ஏற்றுக்கொண்டு, பிரதமர் மோடிக்கு வணக்கம் தெரிவித்து, அவருக்கு இருக்கை வழங்குகிறார். குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார். இந்து மதத்தின் மிக முக்கியமான ஆன்மீக மையத்திலிருந்து அவர் களத்தில் இறங்குவது இது மூன்றாவது முறையாகும்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி புனித கங்கை நதிக்கரையில் உள்ள சின்னமான தசாஸ்வமேத படித்துறையில் பிரார்த்தனை செய்தார். பழமையான கால பைரவ் கோயிலுக்கும் சென்றார்.

படித்துறையில் ஆரத்தி

தசாஸ்வமேத படித்துறையில் பிரதமர் மோடி ஆரத்தி நடத்தினார்.

படித்துறையில் வழிபட்ட பின்னர், பிரதமர் மோடி நமோ படித்துறைக்கு சொகுசு கப்பலில் சென்றார். பின்னர் அவர் புகழ்பெற்ற கோயிலை அடைந்தார், அங்கு அவர் வேத மந்திரங்களை உச்சரித்தபடி தெய்வத்தின் முன் பிரார்த்தனை செய்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.