தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Bjp Pmk Alliance: பாஜக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜ்யசபா சீட் கிடைப்பது சந்தேகம்?

BJP PMK Alliance: பாஜக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜ்யசபா சீட் கிடைப்பது சந்தேகம்?

Kathiravan V HT Tamil
Mar 19, 2024 07:41 AM IST

”Loksabha Election 2024: பாஜக சார்பில் அக்கட்சி மாநிலத்தலைவர் அண்ணாமலையும், பாமக சார்பில் அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸும் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்”

பாமக- பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
பாமக- பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

ட்ரெண்டிங் செய்திகள்

பாஜக சார்பில் அக்கட்சி மாநிலத்தலைவர் அண்ணாமலையும், பாமக சார்பில் அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸும் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

முன்னதாக தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் தொடர்பாக தைலாபுரம் இல்லத்தில் உள்ள தனி அறையில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியொர் உடன் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். 

தர்மபுரி, அரக்கோணம், திண்டுக்கல், ஆரணி, கடலூர், ஸ்ரீபெரும்புத்தூர், மத்திய சென்னை உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,பத்து ஆண்டுகளாக பாமக தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாமக-தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து வரும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. 

நாட்டின் நலன் கருதி, மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் நல்லாட்சி தொடர, தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர, நாங்கள் இந்த முடிவை எடுத்து உள்ளோம். இந்த முடிவுக்கு பிறகு 60 ஆண்டுகாலமாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான சூழல் உள்ளது. 

மக்களுக்கு மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக உள்ளது. அதை பூர்த்தி செய்யத்தான், நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெறும். மாண்புமிகு பிரதமர் அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார். 

பின்னர் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியான பாமக நம்முடைய பாரத பிரதமர் மோடி கரத்தை வலுப்படுத்தி 400 இடங்களை தாண்டி வெற்றி பெறும் வேள்வியோடு களம் இறங்கி உள்ளனர். இந்தியாவின் தனிப்பெரும் அரசியல் தலைவராக உள்ள மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பாஜக தலைவர்களின் அன்பை முழுமையாக பெற்றவர் ஐயா ராமதாஸ் அவர்கள். 

ஐயா யோசித்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களை மோடி அவர்கள் இந்தியாவில் செயல்படுத்தி வருகிறார். அன்புமணி ராமதாஸ் அவர்கள் அற்புதமான மாற்று அரசியலை கொண்டு வர துடித்துக் கொண்டிருக்குக்கிறார். நம் வலிமையான கூட்டணி மக்களை நம்பி இக்கூட்டணியை ஆதரிப்பார்கள் என்ற முழு நம்பிக்கையோடு களம் இறங்கி உள்ளோம். 

பாமக தலைவர்களுக்கு நன்றியை கூறி கொள்கிறோம். தமிழ்நாட்டின் அரசியல் முற்றிலுமாக மாற்றி உள்ளது. 2024இல் மாபெரும் வெற்றி 2026 ஆம் ஆண்டில் வெற்றி கிடைக்கும்.

பிரதமர் மோடியின் ஒரே மேடையில் மருத்துவர் ஐயாவை ஏற்றி பார்க்க வேண்டும் ஆசையோடு நாங்கள் வந்துள்ளோம். அவர்கள் சேலம் மாநாட்டுக்கு வர அவர்கள் இசைவு தெரிவித்துள்ளனர். 

தேசிய ஜனநாயக கூட்டணியில், பாமக 10 இடங்களில் போட்டியிட உள்ளனர். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. என்னென்ன தொகுதிகள் என்பது தகுந்த நேரத்தில் சொல்லப்படும் என கூறி உள்ளார். பாமகவுக்கு ராஜ்யசபா சீட் தரப்படுமா என்ற கேள்விக்கு அண்ணாமலை தெளிவாக பதில் அளிக்கவில்லை. 

WhatsApp channel

டாபிக்ஸ்