Nitish Kumar: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்புகிறாரா பீகார் முதல்வர் நிதிஷ்.. சுஷில் மோடி கூறுவது என்ன?
ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான நிதிஷ் குமார், பாஜகவுடன் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது முன்னாள் கூட்டாளியான தேசிய ஜனநாயக கூட்டணியுடனான உறவுகளை புதுப்பிப்பதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில், அரசியலில் யாருக்கும் கதவுகள் நிரந்தரமாக மூடப்படுவதில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி வெள்ளிக்கிழமை சூசகமாக தெரிவித்தார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜே.டி (யு) )தலைவரான நிதிஷ் குமார், பாஜக உயர் மட்டத்துடன் மீண்டும் கூட்டணியில் இணைய ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
'நிதிஷ் குமார் அல்லது ஐக்கிய ஜனதா தளத்தைப் பொறுத்தவரை, அரசியலில் கதவுகள் ஒருபோதும் நிரந்தரமாக மூடப்படுவதில்லை. நேரம் வரும்போது மூடிய கதவுகள் திறக்கப்படுகின்றன, ஆனால் அவை திறக்கப்படுமா இல்லையா என்பதை எங்கள் மத்திய தலைமை தீர்மானிக்க வேண்டும்" என்று சுஷில் மோடி கூறியதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
