Modi: ‘மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆக கூடாது! ஆனால் இது நடக்கும்!’ பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேட்டி!
“திமுக அரசை கவிழ்ப்பதற்கான அவசியம் தற்போது இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேட்டி”

பிரதமர் நரேந்திர மோடி - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆக வரக்கூடாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர் சந்திப்பு
கேள்வி:- தமிழக தேர்தல் களம் திமுக-பாஜக என்று மாறி உள்ளதாக கூறுகிறார்களே?
கனவு எல்லோருக்கும் இருக்கு; எது உண்மை என்பதை இப்போ சொல்ல முடியாது.