Sellur Raju: ’பலாப்பழத்தை தேடி ஈக்கள்தான் வரும்! அதிமுக தொண்டன் வரமாட்டான்’ ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜு பதிலடி!
”தமிழ்நாடு என்பது திராவிட பூமி, இரண்டு இயக்கங்கள் தலைமையிலான கூட்டணியைதான் மக்கள் ஆதரிப்பார்கள். இரு கழகங்கள் கிளைதான் விரிந்து பறந்து உள்ளது”

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ - கோப்புப்படம்
பலாப்பழம் சின்னம் வைத்திருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தை தேடி ஈக்கள் வேண்டுமானால் செல்லுமே தவிர அதிமுக தொண்டர்கள் செல்ல மாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி உள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குடும்பத்தினர் உடன் வந்து வாக்கு அளித்தார்.