Modi vs MK Stalin: ’இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பு பேச்சு!’ நரேந்திர மோடியை விளாசும் மு.க.ஸ்டாலின்!
”அவரது இத்தகைய அப்பட்டமான வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சைக் காதில் வாங்காதது போல் இருக்கும் தேர்தல் ஆணையம் நடுநிலைமை என்பதன் சுவடே இன்றி அப்பண்பையே கைவிட்டுள்ளது”

பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப்பேச்சு இழிவானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ராஜஸ்தானில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்கள் மற்றும் "ஊடுருவல்காரர்கள்" போன்ற சிறுபான்மையினருக்கு செல்வத்தை மறு விநியோகம் செய்வார்கள் என்று கூறினார்.
"தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தங்கத்தை கணக்கிட்டு, பின்னர் அந்த சொத்தை விநியோகிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது" என்ற பிரதமர் நரேந்திர மோடி, "அவர்கள் அதை யாருக்கு விநியோகிப்பார்கள்?" என்று அவர் கேட்டார்.
