Election 2024 : வாக்குப்பதிவு தொடங்கியது.. மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1.90 லட்சம் போலீசார் குவிப்பு!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Election 2024 : வாக்குப்பதிவு தொடங்கியது.. மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1.90 லட்சம் போலீசார் குவிப்பு!

Election 2024 : வாக்குப்பதிவு தொடங்கியது.. மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1.90 லட்சம் போலீசார் குவிப்பு!

Divya Sekar HT Tamil Published Apr 19, 2024 07:07 AM IST
Divya Sekar HT Tamil
Published Apr 19, 2024 07:07 AM IST

lok sabha election 2024 : காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம். மாலை 6 மணி வரை வரும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும் ,

தொடங்கியது வாக்குப்பதிவு (கோப்புபடம்)
தொடங்கியது வாக்குப்பதிவு (கோப்புபடம்)

543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம். மாலை 6 மணி வரை வரும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும் , டோக்கன் பெற்ற கடைசி வாக்காளர் வரை வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 68, 321 வாக்குச் சாவடிகள் உள்ளன. 39 வாக்கு எண்ணும் மையம். மொத்த வாக்காளர்கள் 6.23 கோடி . 18 முதல் 19 வயதிலான முதல் முறை வாக்களிப்போர் 10.92 லட்சம். 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 874 ஆண் வேட்பாளர் , 76 பெண் வேட்பாளர்கள். 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 15 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவ படையினர் தேர்தலுக்கு பின் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

தமிழகத்தில் 8050 பதற்றமான வாக்குச்சாவடிகள் , 181 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை. தேர்தல் விதிகள் அமலான பிறகு ((நேற்று முந்தினம் காலை 9 மணி வரை)) 173.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

6.67 கோடி மதிப்பிலானா மது வகைகள, 1.13 போதைப் பொருள்கள்  தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் 1083 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சி விஜில் செயலி மூலம  4861 புகார்கள் பெறப்பட்டு , 22 புகார்கள் மட்டும் நிலுவையில் உள்ளன. 3855 நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட அனைவருக்கும் வாக்காளர் அட்டை அனுப்பப்பட்டு விட்டது. 26.50 லட்சம் வாக்காளர் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் மற்ற 12 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம். கடந்த மக்களவைத் தேர்தல்களில் தமிழகத்தில்

2009 - 73.02

2014 -73.74

2019 - 72 . 47 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

கிட்டதட்ட 1 லட்சம் தமிழக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். 12 , 220 முன்னாள் ராணுவ வீரர்கள் , 1931 ஓய்வுபெற்ற காவலர்கள் , கேரளா ஆந்திராவில் இருந்து 3500 காவலர்களும் , ஆந்திரா , தெலங்கானாவில் இருந்து ஊர்க்காவல்படையினரும் அழைத்து வரப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு நாளில் தமிழகத்தில் மொத்தமாக 1.3 லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்குப்பதிவு எந்திரங்கள் - 1 லட்சத்து 58 ஆயிரத்து 568 ,

கட்டுப்பாட்டு இயந்திரங்கள் - 81 , 157

விவிபாட் இயந்திரங்கள்- 86 , 858.

விளவங்கோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் - 325.

கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 326 ,

விவிபாட் இயந்திரங்கள் - 346 உள்ளன.

தேவைக்கும் கூடுதலாக 20 சதவீதம் வாக்குப் பதிவு எந்திரங்கள் தயாராக உள்ளன , பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் மாற்றும் வகையில்.

44 , 801 வாக்குச்சாவடிகள் web casting முறையில் நேரடியாக கண்காணிக்கப்படுகின்றன. 65 சதவீத வாக்குச்சாவடிகள் இம்முறையில் கண்காணிப்பு. மாற்றுத்திறனுடையோரை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சக்கர நாற்காலி குறைந்தபட்சம் ஒன்று இருக்கும் . உதவிக்கு தன்னார்வலர்கள் இருப்பர்.

85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் , மாற்றுத்திறனாளிகள் 1950 க்கு தொடர்பு கொண்டு வாகன உதவி கோரலாம். அவர்கள் அழைத்து வரப்பட்டு மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சென்று இலவசமாக இறக்கிவிடப்படுவர்.

85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு செல்வதற்காக பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் , மாற்றுத்திறனாளிடமிருந்து 1,08,804 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. முதியோர், மாற்றுத்திறனாளிகள் , கர்ப்பிணிப் பெண்கள் வாக்குச் சாவடிகளில் நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்களிக்கும் வகையில் முன்னுரிமை தரப்படும்.

Voter help line செயலியில் epic no மூலம் தங்களுடைய பெயர் பட்டியலில் இருக்கிறதா , எந்த வாக்குச்சாவடியில் பெயர் இருக்கிறது என்பதை வாக்காளர்கள் பார்க்க முடியும்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக இப்போது யாரும் பெயரை சேர்க்க முடியாது. பணப்பட்டுவாடா குறித்து சிவிஜில் செயலி மூலம் புகாரளிக்கலாம்.

வாக்குச்சாவடிகளுக்குள் அதிகாரிகள் தவிர , வாக்காளர்கள் உள்ளிட்ட யாரும் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை. வாக்குசாவடி அமைந்துள்ள வளாகத்தினுள் செல்போன் எடுத்து சென்றாலும் , வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன் எடுத்து செல்லக் கூடாது. வாக்குச்சாவடி வளாகத்தில் செல்பி பாயின்ட்கள் அமைக்கப்படுகின்றன. தேர்தல் பணியில் ஈடுபடுவோரில் 70 சதவீத பணியாளர்கள் பெண்கள்தான்.