இந்திய அணியின் வேகப்புயல்..விதர்பா எக்ஸ்பிரஸ்! உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர்
HBD Umesh Yadav: 2015 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனை புரிந்தவர் உமேஷ் யாதவ். ஆஸ்திரேலியா மண்ணில் தனது கிரிக்கெட் கேரியரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவராக இருந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட்டில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ். கடந்த 2013இல் தோனி தலைமையில் இந்தியா வென்ற சாம்பியன்ஸ் கோப்பை அணியில் அங்கம் வகித்த இவர், 2015 ஒரு நாள் உலகக் கோப்பை அணியிலும் விளையாடியுள்ளார். 2010இல் இந்திய அணிக்காக முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் களமிறங்கினார் யாதவ். தற்போது 37 வயதாகும் இவர் இளம் வீரர்களின் வரவால் ஓரம் கட்டப்பட்டுள்ளார்.
உமேஷ் யாதவ் கிரிக்கெட் பயணம்
மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் பிறந்த உமேஷ் யாதவ் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் வல்லவராக திகழ்ந்தார். தனது கல்லூரி கிரிக்கெட் அணியில் சேர விரும்பினார். ஆனால் கிளப் கிரிக்கெட் எதுவும் ஆடாத அவர் நிராகரிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து விதர்பா ஜிம்கானா கிளப்பில் இணைந்து முதல் முறையாக கிரிக்கெட் பந்தில் பவுலிங் செய்தார். தொடர்ந்து கிளப் கிரிக்கெட்டில் விளையாடி வந்த இவர் 2008இல் முதல் தர கிரிக்கெட்டில் விதர்பா அணியில் அறிமுகமானார். அதே ஆண்டில் ராஞ்சி சீசனில் விளையாடிய இவர் தனது அசுர வேகத்தால் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்யும் பவுலராக திகழ்ந்தார்.
மாற்று வீரராக வாய்ப்பை பெற்ற உமேஷ்
ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது வேகத்தால் கவனத்தை ஈர்த்த உமேஷ் யாதவ் 2010 டி20 உலகக் கோப்பை தொடரில் காயமடைந்த பிரவீண் குமாருக்கு மாற்று வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் விளையாடவில்லை.
