முதல் இந்தியராக சஞ்சு சாம்சன் சாதனை..கடைசி 5 ஓவரில் தென் ஆப்பரிக்கா தரமான கம்பேக் - பினிஷிங்கில் சொதப்பிய இந்தியா
டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்து முதல் இந்தியராக சஞ்சு சாம்சன் சாதனை புரிந்துள்ளார். இந்தியா பினிஷிங்கில் சொதப்பிய நிலையில் பெரிய ஸ்கோர் குவிக்க தவறியது.

தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி விளையாடுகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்கியுள்ளது.
தென் ஆப்பரிக்கா பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பரிக்கா அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்துள்ளது. இந்திய பேட்டர்களில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 107, திலக் வர்மா 33, சூர்யகுமார் யாதவ் 21 ரன்கள் எடுத்தனர்.
தென்ஆப்பரிக்கா அணியில் 7 பேர் பவுலிங் செய்த நிலையில், அனைவரின் ஓவர்களிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்து துவைத்து ரன்கள் எடுத்தனர். ஜெரால் கோட்ஸி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், பேட்ரிக் க்ரூகர், பீட்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.