தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Wpl 2024: ஈ சாலா கப்பை நெருக்கிய ஆர்சிபி! மும்பைக்கு எதிராக த்ரில் வெற்றி - பைனலில் டெல்லிக்கு எதிராக மோதல்

WPL 2024: ஈ சாலா கப்பை நெருக்கிய ஆர்சிபி! மும்பைக்கு எதிராக த்ரில் வெற்றி - பைனலில் டெல்லிக்கு எதிராக மோதல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 15, 2024 11:30 PM IST

குறைவான ஸ்கோர் எடுத்திருந்தபோதிலும் பவுலிங்கில் மும்பைக்கு நெருக்கடி கொடுத்து த்ரில் வெற்றியை பெற்றுள்ளது ஆர்சிபி. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் எலிமினேட்டரில் நாக் அவுட்டாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி மகளிர் அணியினர்
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி மகளிர் அணியினர் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சூழ்நிலையில் பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியை 5 ரன்களில் வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது ஆர்சிபி மகளிர் அணி.

ஆர்சிபி பேட்டிங்

இதையடுத்து டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து பேட் செய்ய வந்த ஓபனர்களான ஸ்மிருதி மந்தனா, சோபி டெவின் ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை தராமல் ஏமாற்றினர். இருவரும் தலா 10 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்தடுத்து அவுட்டாக பெவிலியன் திரும்பினர்.

மூன்றாவது பேட்டரகா களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி பொறுப்புடன் பேட் செய்தார். இவருடன் இணைந்து யாரும் பெரிதாக பார்ட்னர்ஷிப் அமைத்திராத நிலையில், தனி ஒருவளாக ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

அரைசதத்தை பூர்த்தி செய்த எல்லிஸ் பெர்ரி 50 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவருக்க அடுத்தபடியாக கடைசிகட்டத்தில் பேட் செய்ய வந்த ஜார்ஜியா வேர்ஹாம் சிறிய கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தி 18 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

20 ஓவரில் ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. மும்பை பவுலர்களில் ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், சைகா இஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மும்பை சொதப்பல்

சேஸிங்கில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கும் ஆர்சிபி ணகளிர் அணியை போல் சரியான தொடக்கம் அமையாமல் போனது. அதிரடியாக பேட் செய்யக்கூடிய ஹேலி மேத்யூஸ் 15 ரன்னில் நடையை கட்டினார்.

இவருக்கு அடுத்தபடியாக வந்த நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் விரைவாக 23 ரன்கள் அ\டித்து வெளியேறினார். ஓபனர் யஸ்திகா பாட்யா ரன்கள் அடிக்க தடுமாறியுடன் அதிக டாட் பந்துகளை எதிர்கொண்டதால் அணிக்கு தேவைப்படும் ரன்ரேட்டானது அதிகரித்து.

மறுமுனையின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் நிதானமும், அதிரடியும் கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

அதேபோல் யஸ்திகா பாட்யாவும் 27 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானார். மிடில் ஆர்டரில் பேட் செய்ய வந்த அமெலியா கெர் கடைசி வரை வெற்றிக்காக போராடியபோதிலும் பலன் கிடைக்காமல் போனது. 27 ரன்கள் அடித்த அவர் நாட் அவுட் பேட்டராக உள்ளார்.

20 ஓவரில் 6 விக்கெட்டு இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் எடுத்த நிலையில், 5 ரன்களில் தோல்வியை தழுவியது.

ஆர்சிபி பவுலர்களில் ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எல்லிஸ் பெர்ரி, சோஃபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஆஷா சோபனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய ஆர்சிபி, முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் - ஆர்சிபி மகளிர் அணி மோதவுள்ளன.

டெல்லிக்கு இரண்டாவது பைனல்

கடந்த சீசனில் ஏற்கனவே பைனலுக்கு தகுதி பெற்று மும்பையிடன் வீழ்ந்த டெல்லி கேபிடல்ஸ் இந்த முறை மீண்டும் இறுதிப்போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி டெல்லியில் இருக்கும் அருண் ஜெட்லி மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு தொடங்கும்.

IPL_Entry_Point