அணி வீரர் மீது தாக்குதல்..வங்கதேச பயிற்சியாளரை தூக்கி கிரிக்கெட் வாரியம் - என்ன நடந்தது?
அணி வீரர் மீது தாக்குதல் நடத்தியதாக வங்கதேசம் பயிற்சியாளராக தூக்கி எறிந்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். புதிய தற்காலிக பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அணி வீரர் மீது தாக்குதல்..வங்கதேச பயிற்சியாளரை தூக்கி கிரிக்கெட் வாரியம் - என்ன நடந்தது? (PTI)
சமீபத்தில் இந்தியா சுற்றுப்பயணம் வந்த வங்கதேசம் அணி டெஸ்ட், டி20 தொடரில் விளையாடியது. இதில் இரண்டிலும் முழுமையாக தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து வங்கதேசம் அணி அடுத்ததாக தென் ஆப்பரிக்கா அணியான எதிரான தொடரில் வெளியாகவுள்ளது.
வங்கதேசம் சுற்றுப்பயணம் வரும் தென் ஆப்பரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கு இடையே அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கிடையே வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த சந்திக ஹத்துருசிங்கவை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது.