Problem Rasis : எச்சரிக்கையாக இருங்கள்.. அக்டோபர் 30 வரை சிக்கலை சந்திக்க போகும் மூன்று ராசிகள்!
செவ்வாய் மற்றும் கேது பகவானால் சிக்கல்களை சந்திக்கப் போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான் இவருடைய இடமாற்றம் மிகவும் பெரிதாக ஜோதிட சாஸ்திரத்தில் காணப்படுகிறது.
செவ்வாய் பகவான் துணிச்சல் வீரம் தைரியம் தன்னம்பிக்கை உள்ளிட்ட அவற்றிற்கு காரணியாக விளங்கி வருகிறார் ஒரு ராசியில் இடமாற்றம் செய்தால் செவ்வாய் பகவான் சஞ்சாரம் செய்ய 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.
செவ்வாய் பகவான் அக்டோபர் மூன்றாம் தேதி அன்று துலாம் ராசிக்குள் சஞ்சாரம் செய்ய நுழைந்தார். இதே ராசியில் கேது பகவான் பயணம் செய்து வருகிறார். அக்டோபர் மூன்றாம் தேதி அன்று இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை நடந்தது.
இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை மோசமான நிலை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சில ராசிகள் பல்வேறு விதமான சங்கடங்களை சந்திக்க போகின்றனர்.
அக்டோபர் 30-ம் தேதி அன்று கேது பகவான் இடமாற்றம் செய்யும் வரை இதே நிலைமையில் தான் அனைவரும் இருப்பார்கள் என கூறப்படுகிறது. அந்த வகையில் சிக்கல்களை சந்திக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
மேஷம்
செவ்வாய் மற்றும் கேது சேர்க்கையால் நீங்கள் சங்கடங்களை சந்திக்க போகின்றீர்கள் வரும் அக்டோபர் 30ம் தேதி வரை சிக்கல்கள் இருந்து கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் சற்று சிக்கலான சூழ்நிலை உருவாகும்.
துலாம்
வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. நவம்பர் மாதம் வரை இதே சூழ்நிலையில் தான் நீங்கள் இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பண வரவு சற்று மந்தமாக இருக்கும். கவனமாக இருக்க வேண்டும்
மிதுனம்
வேலை செய்யும் இடத்தில் கடினமான சூழ்நிலை உண்டாகும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும் தொழிலில் கடினமான உழைப்பு தேவைப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்