Money Luck: செவ்வாயும் சுக்கிரனும் அதிர்ஷ்டம் கொட்டும் ராசிகள்
செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்து பண யோகத்தை கொடுக்கப் போகின்ற ராசிகளை காண்போம்.
நவக்கிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுகிறார். மன தைரியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக இவர் விளங்கி வருகிறார்.
தற்போது செவ்வாய் பகவான் தனது சுந்தர் ஆசியான விருச்சிக ராசிக்குள் பயணம் செய்து வருகிறார். செல்வம், செழிப்பு, காதல், ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார்.
சுக்கிர பகவான் வரும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று செவ்வாய் பகவானின் சொந்த ராசியான விருச்சிக ராசிக்கு உள் நுழைகிறார். ஏற்கனவே செவ்வாய் பகவான் அங்கு பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சுக்கிரன் அவரோடு இணைகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளை காண்போம்.
சிம்ம ராசி
இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை உங்கள் ராசியில் நான்காம் வீட்டில் நிகழ உள்ளது. உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். உயர் அலுவலர்களிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுன ராசி
செவ்வாய் மற்றும் சுக்கிரனின் செயற்கை உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் உருவாகுது. இதுவரை குடும்பத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திற்கு எந்த முறையில் இருக்காது. புதிய முயற்சிகள் நல்ல வருமானத்தை பெற்று தரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
விருச்சிக ராசி
உங்கள் ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர போகின்றனர் அதனால் உங்களுக்கு சுபயோகம் உருவாகி உள்ளது. தன்னம்பிக்கை அதிகரித்து முயற்சிகள் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடைய வாய்ப்பு உள்ளது. நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்குகள் வெற்றியடைய வாய்ப்பு உள்ளது. பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9