கடக ராசி பயணத்தால் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!
Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை காணப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 29, 2025 05:00 AM'நல்ல செய்தி தேடி வரும்.. உழைப்பு முக்கியம்' இன்று ஏப்.29, 2025 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி அன்று கடக ராசிக்கு செல்கிறார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை காணப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மிதுன ராசி
செவ்வாய் பகவானின் கடக ராசி பயணத்தால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்ட காலம் தொடங்கிவிட்டது. பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். குடும்பத்தில் இருக்கும். பெரியவர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
உடன் பிறந்தவர்களின் உதவி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
விருச்சிக ராசி
செவ்வாய் பகவானின் சஞ்சாரத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப்போகின்றார். எதனால் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கி விட்டது. அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றி தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
பொருளாதாரம் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத்தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
துலாம் ராசி
செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரப் போகின்றது. கர்ம பாவத்தில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்க கூடும். இந்த காலகட்டத்தில் வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மனிதத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு கிடைக்கும். புதிய தொழில் மற்றும் வேலையை தொடங்க திட்டமிட்டவர்களுக்கு இது சாதகமான காலமாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
