Shani Dosha Remedies: சனி தோஷம் நீக்கும் பரிகாரம்!
சனி தோஷம் நீங்கச் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் குறித்து இங்கே காண்போம்.
நவகிரகங்களை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிடம் கூறுகிறது. நவகிரகங்களின் செயல்பாடுகள் பொறுத்தே மனிதனின் செயல்பாடுகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ஒன்பது கிரகங்களில் நீதிமானாக விளங்குபவர் சனி பகவான். அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு பலன்களைத் தரக்கூடியவர்.
சனிபகவான் சரியான இடத்தில் அமர்ந்து விட்டால் தொழில், வேலை ஆகியவற்றில் ஆகச் சிறந்த பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் கோல்சார நிலையின்படி சனி பகவான் சாதகமற்ற நிலையில் அமர்ந்தால் பல சிக்கல்கள் ஏற்படும். இது போன்ற சனி தோஷங்களிலிருந்து நலம் பெற சில பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்கள் குறித்து இங்கே காண்போம்.
பரிகாரங்கள்
சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, இரும்பால் செய்யப்பட்ட விளக்கில் விளக்கெண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகிய மூன்றையும் சேர்த்து, கருப்புத் துணியைத் திரியாக்கி தீபம் ஏற்றி மேற்கு திசை நோக்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
எள் மற்றும் சிறிய கருப்பு துணியை உறங்கும் முன் தலையணைக்குக் கீழ் வைத்துப் படுக்க வேண்டும். பின்பு காலை எழுந்தவுடன் அந்த எல்லை எடுத்து நல்லெண்ணெய் ஊற்றி சாதத்தில் போட்டு நன்றாகப் பிசைந்து மூன்று முறை தலையைச் சுற்றி திருஷ்டி கழித்து விட்டு காகத்திற்கு உணவாக இட வேண்டும்.
இந்த பரிகார முறையைத் தொடர்ந்து 9 நாட்கள் செய்து வந்தால் சனி தோஷம் விலகும் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் இந்த ஒன்பது நாட்களும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால் சனி தோஷத்தால் ஏற்பட்ட அனைத்து சிக்கல்களும் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.