Zodiac Signs: அடேங்கப்பா.. ஜாக்பாட் ராசிகள்.. செவ்வாய் கதிகலங்க விடப் போகிறார்.. ஏறப்போகும் ராசிகள்
Lord Mars: செவ்வாய் பகவானின் வலிமை கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 30, 2025 05:33 PMபாக்கியங்களை அள்ளிக் கொட்ட வரும் குரு.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?
Apr 30, 2025 01:58 PMகங்கா சப்தமி நாளில் உருவாகும் திரிபுஷ்கர, ரவி யோகம்.. வருமானம், நிதி நிலை மேம்பாடு பெறப்போகும் 5 ராசிகள் இதோ
Apr 30, 2025 10:15 AMகோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!
Apr 30, 2025 07:30 AMகூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
Apr 30, 2025 05:00 AMஅட்சய திருதியையில் அதிர்ஷ்டம் யாருக்கு.. இன்று ஏப்.30, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
செவ்வாய் பகவானின் இடமாற்றம் கட்டாயமனை தராசுகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் செவ்வாய் பகவான் தனது எதிரி ராசியான மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் மிகவும் வலிமையான சூழ்நிலையை அடைகின்றார்.
செவ்வாய் பகவானின் வலிமை கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
சிம்ம ராசி
செவ்வாய் பகவானின் நிலையால் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றங்கள் ஏற்படும். ஒவ்வொரு துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலையில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும் பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். செவ்வாய் பகவானின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுமையாக இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
கும்ப ராசி
செவ்வாய் பகவானின் நிலையால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி காண்பார்கள். மாணவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் ரீதியாக உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். பண வரப்பில் இருந்த குறையும் இருக்காது.
துலாம் ராசி
செவ்வாய் பகவானின் இந்த நிலையால் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றம் கிடைக்கும். காதல் வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
