தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kala Sarpa Dosha: கால சர்ப்ப தோஷத்தைப் போக்க இவ்வளவு எளிமையான பரிகாரமா..!

Kala Sarpa Dosha: கால சர்ப்ப தோஷத்தைப் போக்க இவ்வளவு எளிமையான பரிகாரமா..!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 18, 2023 01:00 PM IST

கால சர்ப்ப தோஷத்தை போக்கக்கூடிய பரிகாரத்தலம் குறித்து இங்கே காண்போம்.

கால சர்ப்ப தோஷம்
கால சர்ப்ப தோஷம்

பல்வேறு விதமான சிக்கல்களைக் கொடுக்கக் கூடிய தோஷங்களில் மிகவும் முக்கியமான தோஷமாகக் கால சர்ப்ப தோஷம் இருந்து வருகிறது. இந்த தோஷமானது ஜாதகத்தில் லக்னம், பூர்வ புண்ணியங்கள், கிரக நிலைகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இதன் பலன்கள் கிடைக்கின்றது.

அதன் காரணமாகக் கால சர்வதேசம் உள்பட அனைத்து விதமான தோஷங்கள் குறித்தும், அதனுடைய காலம், வேகம் உள்ளிட்டவற்றை நன்கு சாஸ்திர மருந்து ஜோதிடர்கள் கொண்டு ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமல் அதை நினைத்து வருத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

எந்த பாதிப்பாக இருந்தாலும் கட்டாயம் சரியான பரிகாரத்தின் மூலம் குறைக்க முடியும். உடனே பரிகாரம் என்றால் அதிக பொருள் செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்கும் என எண்ண வேண்டாம். எளிமையான முறையில் பரிகாரங்களைச் செய்து தோஷங்களை விலக்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு நாக தோஷம் மற்றும் சர்வ தோஷம் என ஜோதிடம் குறிப்பிடக்கூடிய இந்த தோஷங்கள் எல்லாம், ராகு அல்லது கேது ஆகிய இரு கிரகங்களினால் ஏற்படக்கூடியவை ஆகும். ஆனால் கால சர்ப்ப தோஷம் மட்டும் ராகு மற்றும் கேதுவாகிய இரண்டு கிரகங்களினாலுமே ஏற்படக்கூடியவை ஆகும்.

இதற்கு நல்ல பரிகாரம் அளிக்கக்கூடிய எத்தனையோ தலங்கள் இருந்தாலும், சென்னையில் அடுத்துள்ள ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த புண்ணிய பூமியான ஸ்ரீபெரும்புதூர் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

சர்ப்ப தோஷங்களை நிவர்த்தி செய்யக்கூடிய முதன்மையான தளமாக இது விளங்குகிறது. விஷ்ணு புராணத்தின் படி ஐந்து தலைகளைக் கொண்ட விஷ்ணு பகவானின் ஆசனமாக விளங்கக்கூடிய ஆதிசேஷன், த்ரேதா யுகத்தில் லட்சுமணன் ஆகவும், துபாவர யுகத்தில் பலராமராகவும், கலியுகத்தில் ராமானுஜராகவும் அவதரித்ததாகக் கூறப்படுகிறது.

ராமானுஜர் அவதரித்தது அனைவரும் அறிந்த உண்மையாகும். ராகு மற்றும் கேதுவினால் உண்டாகக்கூடிய இந்த கால சர்ப்ப தோஷம் மற்றும் அனைத்து விதமான நாகசர்ப்ப தோஷங்களுக்கும் ஸ்ரீ பெரம்பதூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ ராமானுஜனின் தரிசனமே மிகச் சிறந்த பரிகாரமாகும்.

இந்த கோயிலுக்குப் பின்புறம் உள்ள குளம் ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட அனந்த சரஸ் ஆகும். இந்த திருக்குளத்தில் நீராடி விட்டு, ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ ஆதிகேசவன், அன்னையான ஸ்ரீ யதிராஜ நாத வள்ளி ஆகியோர் தரிசித்தால் கால சர்ப்ப தோஷம் நீங்கும் என நம்பப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்