Guru Dosham: குருவின் கோபத்தை குறைத்து குரு தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் இதோ!
யோக பலன்களில் அமர்ந்தால் குரு பகவானைப் போல் அள்ளிக் கொடுப்பவர் நவகிரகங்களில் எவரும் இல்லை என ஜோதிடம் கூறுகிறது. அந்த நவகிரகங்களில் முக்கிய இடம் பெற்றவர் குருபகவான்.
நவகிரகங்களின் செயல்பாடுகளை வைத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஆன்மீகம் கூறுகிறது. நவகிரகங்களும் தெய்வீக பலன்களைக் கொண்டிருந்தாலும் ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் இடத்தை பொறுத்து ஒருவருக்கு நன்மையும், தீமையும் அமையும்.
அவ்வாறு யோக பலன்களில் அமர்ந்தால் குரு பகவானைப் போல் அள்ளிக் கொடுப்பவர் நவகிரகங்களில் எவரும் இல்லை என ஜோதிடம் கூறுகிறது. அந்த நவகிரகங்களில் முக்கிய இடம் பெற்றவர் குருபகவான்.
ஒருவரின் ஜாதகப்படி குரு பகவானின் பார்வை பட்டால் தான் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், செல்வம், பதவி உள்ளிட்டவை ஏற்படும். ஜாதகத்தில் குரு பகவான் நல்ல இடத்தில் இல்லாமல் இருந்தால் அல்லது கொடூரமானவராக இருந்தால் கோச்சார ரீதியாக குரு தோஷம் நீங்கப் பரிகாரம் செய்ய வேண்டும்.
அதாவது குரு பகவானின் அசுப பலன்களை போக்குவதற்கு வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாகத் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய வேண்டும் என ஜோதிடம் கூறுகிறது. தட்சணாமூர்த்தியை வேண்டி விரதம் இருந்து பூஜித்தால் குரு தோஷம் விளக்கும்.
குருவின் சாபமும், தோஷமும் உண்டு. ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர்கள் பல்வேறு பரிகார முறைகளை பின்பற்றலாம். ஜாதகத்தில் குரு தோஷத்தை நீக்க வேத ஜோதிடத்தில் பல பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
முதல் எழுத்துக்களை கற்றுக் கொடுத்தவர் குரு. குழந்தைகளின் முதல் ஆசிரியர் பெற்றோர். பிறகு ஆசிரியர்கள். பெற்றோர் உட்பட அனைத்து குருக்களையும் வணங்குவதன் மூலம் குரு தோஷத்திலிருந்து விடுபடலாம்.
குருபூஜையை குருபூர்ணிமா தினத்தில் மட்டுமின்றி வாரத்தின் முக்கிய நாட்களிலும் குறிப்பாக வியாழன் அன்றும் செய்யலாம்.
பிருஹஸ்பதி மந்திரத்தை உச்சரிக்கவும். இதனால் வியாழனின் ஆசி கிடைக்கும். இந்த மந்திரத்தை வியாழன் தோறும் 108 முறை ஜபிக்கவும். உங்கள் ஜாதகத்தில் குரு தோஷம் நீங்கும்.
கங்கா ஸ்நானம் மற்றும் தானம்: குரு பூர்ணிமா அன்று கங்கா ஸ்நானம் மற்றும் தானம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கங்கையிலோ அல்லது ஏதேனும் ஒரு புனித நதியிலோ நீராடி மஞ்சள் பொருட்களை தானம் செய்ய வேண்டும். இது குண்டலியில் வியாழனை வலுப்படுத்தும்.
மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யுங்கள்: குரு தோஷத்தை நீக்க குரு பூர்ணிமா அன்று குரு யந்திரத்தை வீட்டில் வைக்க வேண்டும். இந்த நேரத்தில் மஞ்சள் நிற ஆடைகளை அணிய வேண்டும். யந்திரத்தை நிறுவிய பின் பூஜையை முழுமையான சடங்குகளுடன் செய்ய வேண்டும். மஞ்சள் ஆடை மற்றும் மஞ்சள் பொருட்களை பிராமணருக்கு தானம் செய்ய வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்