தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Tips: வீட்டை விட்டு வெளியேறும்போது இதை மட்டும் செய்யுங்கள் - எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றிதான்

Vastu Tips: வீட்டை விட்டு வெளியேறும்போது இதை மட்டும் செய்யுங்கள் - எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றிதான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 19, 2024 12:45 PM IST

வீட்டை விட்டு வெளியேறும் முன் சில விஷயங்களை செய்வதன் மூலம் எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றியை பெறலாம்.

வீட்டை விட்டு செல்லும்போது செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன?
வீட்டை விட்டு செல்லும்போது செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன?

எந்த ஒரு முக்கிய வேலையாக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கடவுளை வணங்குவது, சில விஷயங்களை செய்தால் எடுத்துக்கொண்ட வேலை சிறப்பாக நடைபெறும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

இந்த சாஸ்திரங்கள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு அறிவியல் அடிப்படை காரணமும், பின்னணியும் இல்லாவிட்டாலும் அவற்றை பின்பற்றுவதன் மூலம் நல்ல பலன்களை கிடைப்பதாக பலராலும் நம்பப்படுகிறது. அந்த வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்

வீட்டை விட்டு வெளியேறும் முன் செய்ய வேண்டிய விஷயங்கள்:

வாஸ்துசாஸ்திரத்தின் படி, வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, கைகளை திறந்து இறைவனை பிரார்த்தனை செய்து சில மந்திரங்களை உச்சரிக்கவும். இதை செய்தால் எடுத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. உங்கள் பயணமும் எந்த இடையூறும் இல்லாமல் சுமூகமாக இருக்கும்.

எந்த ஒரு சுப காரியத்துக்காக வீட்டை விட்டு வெளியேறும் முன், ஒரு பாத்திரத்தில் சிறிது அரிசியை போட்டு, அதில் பணத்தை வைத்து கொள்ளுங்கள். பின்னர் தூபத்துடன் ஆரத்தி செய்யவும்.

வீட்டுக்கு வந்த பிறகு அந்த பணத்தை சிவன் கோயிலில் காணிக்கையாக செலுத்த வேண்டும். இதை செய்து விட்டு வெளியே செல்வதை வழக்கமாக்கி கொண்டால் உங்கள் பணியில் வெற்றி கிடைக்கும்.

விநாயகரை வணங்கி சிறிது வெல்லம் சாற்றவிட்டு, பூஜை முடிந்ததும் வெல்லத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் எடுத்த வேலையில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தயிர் மற்றும் சர்க்கரையை ஒன்றாக சமர்ப்பித்தும் பிரசாதத்தை எடுத்துக்கொள்ளலாம்

முக்கியமான வேலைக்காக வெளியே செல்லும் போது, ஆபாசமான வார்த்தைகளையோ, எண்ணங்களையோ பேசாதீர்கள். யாருடனும் சண்டை போடா வேண்டாம். எதிர்மறையான வார்த்தைகளை பேச வேண்டாம். அவ்வாறு செய்வது உங்கள் மனதையும் நீங்கள் செய்யும் வேலகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எந்தவொரு வேலையிலும் வெற்றிபெற, துவைத்து சுத்தமாக வைத்திருக்கும் வெளிர் நிற ஆடைகளை அணிந்து சொல்லலாம். வெளியே செல்லும் போது கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்த பின் செல்ல வேண்டும். இவ்வாறு செய்வதால் புண்ணியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. கண்ணாடி உங்கள் நேர்மறை ஆற்றலை இரட்டிப்பாக்குகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்